Friday, November 5, 2010

பதிவு 9க்கான கருத்துப்பகிர்வுகள்

/பண்ணைகளிலும் அதற்கு வெளியிலும் என்னோடு வாழ்ந்த போராளிகள் ஒடுக்கு முறைக்கு
  எதிராக தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். இன்று மறுபடி பின்னோக்கிப் பார்க்கும்
  போது ஆயிரம் தவறுகள், குறைபாடுகளைக் கண்டுகொள்ள இயலுமாயுள்ளது.எது எவ்வாறாயினும்
  சுயநலமின்றி தான் சார்ந்த சமூகத்தின் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவதற்காக
  தமது இளமைக் காலத்தை அர்ப்பணித்தவர்கள். தமது வீடுகளின் கொல்லைப்புறத்தால்
  பேரினவாதப் பிசாசு மிரட்டிய போது தெருவிற்கு வந்து நெஞ்சு நிமிர்த்தி குரல்
  கொடுத்தவர்கள்.
  அவர்கள் வரித்துக்கொண்ட வழியும்இ புரிந்து கொண்ட சமூகமும் தவறானதாக இருக்கலாம்.
  ஆனாலும் தேவைப்பட்ட போராட்டம் ஒன்றின் முன்னோடிகள். சாதி ஒடுக்குமுறை, சமூக
  ஒடுக்குமுறை, பிரதேசவாதம் போன்ற எதுவுமே இவர்களைக் கட்டுப்படுத்தியதில்லை./- இது
  உண்மை! அதாவது அரசியல் தளம் இல்லை.கொல்லைப் புரத்திற்கு,வீட்டுக்குள் வெள்ளம்
  புகுந்த பிறகுதான் கண்விழித்தார்கள்!,புறச் சூழலின் அழுத்தத்தால்.இந்த
  “ப்றச்சூழல்” புலம்பெயர்ந்த நாடுகளில் விலகிவிடவே மீண்டும் “முருங்கை மரத்தில்
  ஏறிக் கொண்டார்கள்”!.இதில் இரண்டு இருக்கிறது “இனப்பிரச்சனை? அடுத்து
  சமுதாயப்பிரச்சனை”.இனப்பிரச்சனைக்கான “புறச்சூழல்” விலகும்
  போது,”சமுதாயப்பிரச்சனை” மீண்டும் ஆக்கிரமித்துக் கொள்கிறது,என்பதும் உண்மை!.
  Reply alex.eravi@gmail.com
   Posted on 03/05/2010 at 5:43 am
  தற்போது தான் CBC (Canadian Broadcasting Coop ration) TVயில் “Love, Hate and
  Propaganda” என்ற தலைப்பில் ஓர் டாகுமெண்டரி பார்த்தேன், அதைப் பார்க்கும்போது
  என் மனதில் ஓர் கேள்வி எழுந்தது, அமரர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் கிட்லரின் நாசி
  வழியை அப்படியே பின்பற்றியிருக்கிறாரே,கடைசியில் அவரின் முடிவும் அப்படியே
  போயுள்ளதே. ஆனால் கிட்லர் தன்னுடைய காலத்தில் யூதர்களை ஓர் வழிப்பண்ணினார்,
  பிரபாகரன் தன் இனத்தையில்லா ஒரு வழிப்பண்ணி விட்டு போயிட்டார்.
  இந்த டாகுமெண்டரி பார்க்கும்போது கிட்லரின் ஒவ்வொரு அசைவும் எனக்கு பிரபாகரனையே
  அப்படியே கொண்டுவந்தது. பத்திரிகை சுதந்திரத்தை பறித்தது, தென்னிந்திய பாடல்களை
  கேட்கக்கூடாது என்று கட்டுப்பாடுகள் விதித்தது, கையை உயர்த்தி அகவணக்கம்
  செலுத்துதல், ……இப்படி. அப்படியே கிட்லரின் ஆளுமை இவரிடம் இருந்ததை
  பார்க்ககூடியதாக இருந்தது. மிகுதி தொடரில் பாடசாலை மாணவர்களை எப்படி மூளைச் சலவை
  செய்தது என்று வருகிறது.
  அதன் பின் கணனிக்கு வந்ததால் இங்கு ஐயர் அவர்களின் பாகம் ஒன்பது பதிவு
  பதிவாகியிருந்தது, வாசித்துக்கொண்டு போனால், “தவிர ஹிட்லர் மீது கூட பிரபாகரன்
  மிகுந்த மதிப்பு வைத்திருந்தார்” என்பதை வாசிக்கும் போது நான் என்னத்தை சொல்வது….
  அடுத்தவாரமும் இதே நேரம் (9 P.M EST) தொடர்ச்சியுள்ளது, ஆறு தொகுதியாக
  ஒளிபரப்பப்பபடும் முதல் தொகுதி இன்று ஒளிபரப்பட்டது. இதன் மறு ஓளிபரப்பு வரும்
  வெள்ளியன்று 10 pm ET/PT on CBC News Networkஇல் ஒளிபரப்பப்படும்., கனடாவில்
  உள்ளவர்கள் பார்க்கலாம். மற்றவர்கள் இணையத்தினூடாக அறியலாம்.
  இன்று 60 வருடங்களின் பின்பும் கிட்லரை நினைவு கூறுகிறோம், உலகப்போரினால்
  ஏற்ப்பட்ட வடுக்கள் இன்னும் இருந்து கொண்டேயுள்ள வேளையில், எமது 60 வருடப்
  பிரச்சனையான 30 வருடப் போராட்டத்தில் இன்னும் எமது அடிப்படைப் பிரச்சனை
  தீர்க்கப்படாத நிலையில் தற்போது எமது 30 வருடப் போராட்டத்தின் ஆரம்பத்தை
  எழுத்துக்களால் பதியும் ஐயர் அவர்களின் நிதானமான குறிப்புகள் வரலாற்றில் எமது
  போராடத்தின் மூலத்தை கொச்சைப்படுத்துகிறவர்களுக்கு ஓர் காவியமாக அமையும். ஐயர்
  அவர்களின் “ஈழப் போராட்டத்தின் பதிவுகள்” ஆரோக்கியமாக தொடர அவரும் ஆரோக்கியமாக
  ஒருவரினதும் இடையூறுகள் இல்லாமல் எழுத நாமும் துணை இருப்போமாக.
  ஐயர் அவர்களின் பதிவுகளினூடான வரலாறுகள் எமக்கு பாடமாக அமைவது மட்டுமல்லாமல்
  இனிக் கடக்கப் போகும் பாதைய சரியாக அமைக்க உதவட்டும்!
  மேலும் அறிய:
  http://www.cbc.ca/documentaries/lovehatepropaganda/series-info.html
  http://www.cbc.ca/documentaries/lovehatepropaganda/
  Reply
    போச்சு போ
     Posted on 03/05/2010 at 10:10 am
    தென்னிந்திய பாடல்களைக் கேட்கக் கூடதென்று யாரும் கட்டளை பிறப்பிக்கவில்லை.
    அங்கு தென்னிந்தியப் படங்களும், பாடல்களும் கூட எல்லாராலும் கேட்கவும்,
    பார்க்கவும் பட்டன. விடுதலைக்காகப் போராடும் இனத்தின் உணர்வுகளை
    மழுங்கடிக்குமென சில காமரசப் பாடல்களும்,
    படங்களும் தடை செய்யப் பட்டிருந்தன. அல்லது தணிக்கை செய்யப் பட்டன. இதன் மீது
    எனக்கும் விமர்சனம் உண்டு.
    கையை உயர்த்தி எங்கும் வணக்கம் சொன்னதில்லை யாரும். சொல்லப் போனால் பிரபாகரன்
    முகாமிற்கு வந்தால் யாரும் சல்யூட் கூட வைப்பதில்லை. என்ன புருடா
    விடுகிறீர்கள். இருகை கூப்பி வணக்கம் தெரிவிக்கும் பாணியில் , ஒரு கையை வைத்து
    நெஞ்சடியில் வணக்கம் செய்வர் கொடிக்கு. கை உயர்த்தப் படுவதில்லை. இது பல முறை
    விளக்கம் கொடுக்கப்பட்டது. பயிற்சிப் பாசறைகளில் உறுதி மொழி எடுக்கும் போது
    மட்டும் கை உயர்த்தப் படும், அதுவும் ஹிடலரின் சல்யூட் வகை சார்ந்தது அல்ல. அது
    போல் கை உயர்த்தி சபதம், உறுதிமொழி எடுப்பது இந்தியாவின் பள்ளிகளில் பல அரச
    அமைப்புகளில் இருப்பது தான், ஏன் உதைப்பாந்தட்டக்காரர்கள் தேசிய கீதம்
    இசைகையில் நெஞ்சில் கை வத்திருப்பதில்லையா? குற்றம் சாட்டுவதிலும் ஓர் நேர்மை
    வேண்டும்.
    அப்புறம், ஒவ்வோர் மனிதனுக்கும் பிள்ளைக்காலம், இளமை, நடுவயது, முதுமை எனப் பல
    பிராயங்கள் உண்டு. அவ்வவ் வயதுகளில் கொண்ட, கேட்ட, படித்த, ஈர்த்த
    கருத்துக்களால் பலரை பிடிக்க்கும், பிறகு பிடிக்காமல் போகும். 16 வயதில்
    பார்த்த மனிதன் 30, 40 ஒரு மாதிரி இருக்க வேண்டியதில்லை. எனக்கு என்
    பதின்மங்களில் காந்தியைப் பிடித்திருந்தது, இப்போது பகத் சிங்கைப் பிடிக்கிறது.
    ஸ்டாலின், மாவோ மேல் மயக்கம் இருந்தது. இப்போது இல்லை. மார்க்ஸ், அந்தோனியோ
    நிகிரி போன்றோர் இவ் வயதில் என்னை ஈர்க்கிறர். ஒருவன் அப்படியே இருக்க
    வேண்டுமென்பதில்லை. அவன் பதின்மம் முழுமையானதல்ல!
    ஐயர் பார்த்த பிரபாகரன் பதின்மத்திலும், இருபதுகளிலும் இருந்தவன். முப்பது,
    நாற்பது, ஐம்பதில் இருந்த பிரபாகரனைப் பற்றிக் கூட இருந்த பொட்டம்மான் தான்
    சொல்ல வேண்டும். பிற்காலப் பிரபாகரன் விடுதலைப் புலிகளின் சஞ்சிகை ஒன்றில்
    ஹிட்லரைச் சாடியும், யூத மக்களோடு தமிழ் மக்களைப் பொருத்தியும் பதில்
    உரைத்திருந்தது நினைவுக்கு வருகிறது! இறந்த போனபின் யாரும் எதும் சொல்லலாம்,
    இட்டுக் கட்டலாம், ஒப்பிட்டுப் பார்க்கலாம்! தோற்றுப் போனரை அசுரராக்கலாம்!
    ஏனெனில் அவர் தரப்பு அங்கு இருக்காதே! நடத்துங்கள்!
    பி.கு.> ஹிட்லர், ஹிந்தி, ஹிந்து என்பவற்றை ஒன்று கிரந்தத்தில் எழுதுவார்கள்.
    விரும்பாதோர் இ போட்டு இட்லர், இந்தி, இந்து என்பார்கள்! கிட்லர், கிந்தி,
    கிந்து என்றல்ல!
    Reply
      alex.eravi@gmail.com
       Posted on 03/05/2010 at 3:03 pm
      90களில் தமிழீழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் பி.பி.சி செய்தியே ஒழித்து
      கேட்க்கும் நிலையிருந்தது. இது எழுதின சட்டமாக இருக்கவில்லை. ஆனால் தாங்கள்
      குறிப்பிடுவது போல “இனத்தின் உணர்வுகளை மழுங்கடிக்குமென சில காமரசப்
      பாடல்களும்,
      படங்களும் தடை செய்யப் பட்டிருந்தன. அல்லது தணிக்கை செய்யப் பட்டன” அதில்
      எனக்கும் உடன்பாடு உண்டு.
      கையை உயர்த்தி என்று நான் குறிப்பிட்டது, ஓர் கையை மார்பிற்கு நேரே
      வைத்திருப்பதை (முன்னாள் கூட்டமைப்பினர் கூட தமிழீழ விடுதலை புலிகளின்
      கொடியின் முன் ஓர் கையை மார்பிற்கு முன் வைத்திருப்பதை நாம்
      பார்த்திருப்போம்). இதில் நான் குறிப்பிட்டதின் கருத்து, அமரர் வேலுப்பிள்ளை
      பிரபாகரன், அப்படி ஓர் ஒழுக்க கட்டுப்பாடு வைத்திருந்தார் என்பதையே. அத்துடன்
      கிட்லரின் பாணியிலான சுதந்திர, மாற்று ஊடக சுதந்திர மறுப்பு, பாடசாலை
      மாணவர்களை மூளைச்சலவை செய்து இழுப்பது அப்படியே ஒத்து போகிறது.
      நண்பரே! இது நான் விதண்டாவாததிர்க்கோ, தங்களில் பிழை பிடிக்கவோ எழுதவில்லை.
      Just writing the facts. நான் பிரபாகரனின் வரட்டுக் கொள்கையால்
      பாதிக்கப்பட்டவனாக இருந்தாலும், எனது குடும்பத்திலும் மாவீரரை கொண்டுள்ளவன்,
      அத்துடன் நந்திக்கடல் நிலை ஏற்ப்பட்டிருக்கக்கூடாது என நினைப்பவன். அவர்
      சென்ற பாதை பிழை ஒழிய, அவரின் தமிழருக்கான குறிக்கோள் சரி. இன்று
      ஈழத்தமிழருக்கான போராட்டம் இந்த நிலைக்கு வந்ததிற்கு காரணம் அவர் எடுத்த
      பிழையான வழிகள், அவரை ஆதரிப்பவர்கள் என்று கூறும் புலம் பெயர்ந்த புலன்
      பெயர்ந்தவர்களால் நடாத்தப்பட்ட கானல் நீர் போராட்டங்களுமேயாகும்.
      “ஒவ்வோர் மனிதனுக்கும் பிள்ளைக்காலம், இளமை, நடுவயது, முதுமை எனப் பல
      பிராயங்கள் உண்டு”, தாங்கள் சொல்வது சரி, ஐயர் அவர்களின் ஆரம்பகாலத்தில்,
      அமைப்பில் திருமணம் செய்யக்கூடாது என்று கட்டுப்பாடுகள் வைத்திருந்தவர், பின்
      மதிவதனி அக்காவின் அழகில் மதிமயங்கி காந்தர்வ மணம் செய்தவர்தானே.
      அதுமட்டுமல்ல தனது மூத்த மகனின் பிறந்த திகதி கூட உடன் வெளியில் விடவில்லை.
      “பிற்காலப் பிரபாகரன் விடுதலைப் புலிகளின் சஞ்சிகை ஒன்றில் ஹிட்லரைச்
      சாடியும், யூத மக்களோடு தமிழ் மக்களைப் பொருத்தியும் பதில் உரைத்திருந்தது
      நினைவுக்கு வருகிறது!”, அது உண்மை. காரணம் 85களில் எமது போராட்டத்திற்கு
      எதிரான அரசாங்கதிர்ற்கு எந்த அரசாங்கம் டோராப் படகு கொடுத்து, இராணுவப்
      பயிற்சி கொடுத்ததோ அதே அரசாங்கத்தின், உளவுப்பிரிவினரிடம் சமகாலத்தில்
      பயிற்சி பெற்றவர்கள். அதுமட்டுமல்ல ஒரே நேரத்தில் விமான நிலையத்தின்
      ஒருபக்கத்தால் இலங்கை இராணுவத்தினர் பயிற்சி முடிந்து வெளியேற (departure
      gate), மறு பக்கத்தால் பயிற்சி பெற (arrival gate) சென்றனர் ….இதை
      நியாயப்படுத்த இராஜதந்திரம் என்று கூட சொல்லலாம் (இதெல்லாம் இன்று ஆவணமாக
      இருக்கிறது).
      இதன் பின்தான் வடக்கிலிருந்து தமிழ் பேசும் முஸ்லிம் சகோதரர்கள் உடுத்த
      உடையுடன் துரத்தப்பட்டார்கள். அந்த முல்லைத்தீவிலிருந்து சிறுமியாக
      துரத்தப்படவர்தான் இன்றைய சர்வதேச பெண்களிற்கான உயர் விருது (International
      Women of Courage award) பெறும் சகோதரி.ஜன்சில மஜீத் (Ms. Jansila Majeed).
      http://inioru.com/?p=11030
      http://www.southasianmedia.net/index_story.cfm?id=640074&category=Frontend&Country=SRI%20LANKA
      காலத்திர்ற்கு, சூழ்நிலைகட்கு ஏற்ப போராட்டத்தின் வடிவங்கள் மாறலாம்,
      இது……….. ???..
      ஐயர் அவர்கள் ஆரம்பத்தை எழுதட்டும், பொட்டர் உயிருடனிருந்தால், அல்லது K.P
      நடந்ததை எழுதட்டும், இனி நடக்கப்போவதை யார் எழுத இருக்கப்போகிறார்களோ
      தெரியவில்லை.
      Reply
        sathru
         Posted on 03/08/2010 at 4:32 pm
        மேலோட்டமாக ஒரு டொகுமெண்ட்ரியை பார்க்கத்தொடங்கியிருக்கிறீர்கள்.அது
        உங்களுக்கு ப்ரபாகரனை ஞாபகப்படுத்துகிறது.ஹிட்லர் யூதர்களை கொன்று
        குவித்ததும் ஆர்ய இனம் உலகத்தில் உயர்ந்தது என்றதும் னேர்மையற்ற
        பேராசையுந்தான் அவனுக்கும் நேச நாடுகளுக்கும் உள்ள வித்தியாசம்.பிரச்சார
        வழிமுறைகள், கையை வைத்து வணக்கம் சொல்வது, ஒரு பெரும்படையை திரட்டுவது
        போரிடுவது எல்லாமே பொதுவானவைதான்.யுத்த தந்திரங்கள் ஆயுததயரிப்பு
        அர்ப்பணிப்பு ,இராணுவத்தை ஒரு வேகம் கொண்ட படையாக மாற்றுவது எல்லாமே எல்லா
        அரசுகளுக்கும் பொதுவானவை.அப்படி ஊக்குவிப்பது ஒன்றுதான் வெற்றிக்கு வழி
        வகுக்கும்.ப்ரின்ஸ்   என்கிற மாக்கியவல்லியின் நூல் 1513 ல்
        எழுதப்பட்டது.அதன் வழிமுறைளின் மூலம் அதிகாரத்தை தக்க வைப்பது எப்படி
        என்பது கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவும் சரி இந்தியவும் சரி உலகமெங்கும்
        இருக்கின்ற அதிக்கரவர்க்கங்களும் அதே வழிமுறையைத்தான்
        கையாளுகின்றன.மேலோட்டமான சிந்தனை இப்படி ஒப்பிட வைக்கிறது.ஆழமான
        சிந்தனைக்காரர்கள் சொல்ல்வது கருத்துத் திணிப்பை அதாவது பாசிசம்.அதுவும்
        ப்ரபகரனது சொந்தக்கருத்தல்ல தமிழீழம். பிரபாகரன் திணித்தது என்று
        சொல்லப்படுவது ஒரு போராட்ட வழியை.பரீட்சையில் பாஸாவது என்று தீர்மானித்த
        பின் படிக்கவேண்டியதுதானே டீவீ என்ன வேண்டியிருக்கு கதைப்புதகத்தை நிறுத்து
        படி கண்முழிச்சு படி என்று கண்டிப்பான தடியோடு இருக்கிற தந்தைகள் இருக்கிற
        யாழ்ப்பாணத்திலிருந்து வந்த போராட்டம் தமிழீழம் என்று
        தீர்மானித்தாகிவிட்டது.இந்தச்சிந்தனைகள் ஹிட்லரிந்து வரவில்லை. 
        தமிழ்ச்சமுகத்தின் சிந்தனைதான்.அலெக்ஸ் உங்கள் மனைவியை குழந்தைகளை உங்கள்
        விருப்பப்படி கண்டிப்பாக வளர்க்கிறீர்களா? அப்படியாயின் நீங்கள் ஒரு சிறிய
        ஹிட்லரே.ஏனையா வெளியில் தேடுகிறீர்கள்.ப்ராபாகரன் தமிழரின் ஒரு
        பிம்பம்.பிரபாகரன் இயல்பில்லாத ஒருவர் தலைவராக முடியாது.
        பிராபாகரன் இந்திய இராணுவத்துடன் போரிட எடுத்த முடிவை வேறு எவராலும்
        எடுத்திருக்க முடியாது.அப்போது அது தற்கொலைக்கு சமனாக இருந்தது.ஹிட்லருக்கு
        இப்படியெல்லாம் முடிவெடுக்கவேண்டிய தேவையிருக்கவில்லை.மகிந்தவை ஹிட்லருக்கு
        ஒப்பிட்டு பாருங்கள்.எல்லாம் மீண்டும் பொருந்தும்.மாக்கியவல்லி இப்படி
        சொல்லுகிறார். ஒரு எதிரி /ஆபத்து ஒன்றின் மூல்மே மக்களை ஒன்று திரட்ட
        முடியும் .படையை வலுவாக்க முடியும்.அதனால் தன் சிங்களவர்கள் ஏதாவது ஒரு
        எதிரியை எப்போதும் இழுக்கிறார்கள்.வழமையாக தமிழர்களைத்தான்
        சொல்லுவர்கள்.கடந்த முப்பது வருடமாக புலியை சொன்னர்கள்.நாங்கள் சிங்களவரை
        சொல்லி திரள நினைக்கிறோம்.ஹிட்லர் யூதரை சொன்னான்.முதலாம் உலப்போரில்
        தோற்று அவமானப்பட்டுப்போயிருந்த ஜேர்மனி மக்களை ஹிட்லர் கவர்ந்ததில்
        வியப்பிலை.அடிப்படை உள்வியல் பயம்.பாதுகாப்பின்மை என்கிற உணர்வு.அதை
        கிளர்ந்தெளச்செய்வதன் மூலம் அதிகாரத்தை அடைய முடியும்.மக்கள் தங்களை
        பாதுகாப்பவனை,தங்கள் அடக்கப்பட்ட கோபங்களை தீர்க்கிற ஒருவனை இயல்பாகவே
        தலைவனாக்கும்.தமிழர்கள் சிங்கள அதிகாரவர்க்கத்தினர் பதவிக்கு வருவதற்க்காக
        பலிகடாவாக்கப்பட்ட யூதர்கள்.ஹிட்லரப் போலவன்றி இது கொஞ்சம் சிறுக சிறுக
        நடந்தது.யூதர்களிலிருந்து பிறந்த் இஸ்ரேல் போல இந்த அடக்குமுறைகளிலிருந்து
        பிறந்த புலியும் அவலத்தை தருபவனுக்கே திருப்பிக்கொடுத்தது.புலி
        வளரவேண்டியது காலத்தின் கட்டாயமாக இருந்தது.புலி அழிவது காலத்தின் கட்டாயம்
        முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றியது ஒரு இராணுவ
        முடிவு.காட்டிக்கொடுப்பவர்கள் தமிழரிலும் இருந்தார்கள் முஸ்லிங்களிலும்
        இருந்தார்கள் சிலர்தான்.ஆனால் த்மிழர்களை போட்டால் அது இன
        அடக்குமுறையாகாது.முஸ்லிம்களை கண்காணிப்பதும் விசாரிப்பதும் போடுவதும்
        இனஒடுக்குமுறையாகும்.யாழைக்கட்டுக்குள் வைத்திருக்க அவர்களை புலி
        வெளியெற்றிவிட்டது.பாதுகாப்பு வலயம் போல.முஸ்லிம்கள் யாழில்
        இருந்திருந்தால் வேறொருவகை துன்பத்தை
        அனுபவித்திருக்கவேண்டியிருந்திருக்கும். இராணுவ பாதுகாப்பு வலயத்தில்
        தமிழர் இருப்பது போல.பிரபாகரனின் அந்த முடிவு நீண்ட  கால நோக்கில்
        முஸ்லிம்களுக்கு நன்மையாக முடிந்திருக்கிறது.இந்த யுத்ததில் உயிரிழப்பு
        அதிகமில்லாத இனமாக இருக்கிறார்கள்
        காலத்தின் கட்டாயம் என்றால் புலி மீண்டும் வ்ரலாம்.முதலாம் உலகபோரும்
        அதற்குபின்னரானா ஜெர்மனி மீதான நடவடிக்கை ஹிட்லரை தோற்றுவித்ததிலிருந்து
        பாடம் கற்ற அமெரிக்கா இரண்டாம் உலகப்போரின் பின்னர் ஜப்பானை வெறுப்பு
        நிலைக்கு தள்ளாமல்  அந்த வெறுப்பை ஆக்கபூர்வமாக மாற்றியதல் இன்று அது
        வேறொரு வரலாறாகிருக்கிறது.
        Reply thurai
       Posted on 03/05/2010 at 9:05 pm
      பிரபாகரனையும் புலிகளையும் உலகிற்குக் காட்டியவர்கள் புலம்பெயர்
      தமிழர்களேயாகும். இவர்களின் ஒத்துழைப்பும் பணமும் இல்லாமல்
      இவ்வளவு
      தூரம்
      பிரபாகரனால் வளர்ந்திருக்கமுடியாது. புலிகளிற்கு கண்மூடித்தன்மாக ஆதரவை
      வழ்ங்கியவர்களிற்கு யாழ்ப்பாண்த்திற்கு எந்ததிசையில் காங்கேசந்துறை
      உள்ளதென்பதைத் தெரியாதவ்ர்க்ழும் உண்டு.
      என்வேநடந்து முடிந்த தறுக்கெல்லாம் யாவருமே பொறுப்பேற்க் வேண்டும். துரை
      Reply
        Prince
         Posted on 03/10/2010 at 5:36 am
        நான் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவன் உண்மையில் எனக்கு காங்கேசந்துறை எந்த
        திசையில் உள்ளதென்று தெரியாது. நான் தெரியாமல் தான் கேட்கிறேன்
        தமிழீழத்தில் யாழ்ப்பாணம் மட்டும் தான் இடமா ? உங்க்களுக்கெல்லாம் என்ன
        யாழ்ப்பாணம் அமெரிக்கா எண்ட நினைப்பா ?
        Reply
          thurai
           Posted on 03/10/2010 at 4:48 pm
          காங்கேசந்துறை எங்கேயெண்டு தெரியாது
          ஆனால் பரிஸ்,சுவிஸ்,லண்டன் எங்கே எனத் தெரியும். வடக்கு, கிழக்கு, இங்கு
          பிரச்சினையல்ல தமிழரின் பொது அற்வினைப்
          பற்ரியதே என் கருத்து.
          துரைmilenium kutti
           Posted on 03/25/2010 at 10:34 am
          மன்னிக்கவும்.பிரதேச வாதம் கூடாதுதான்.ஆனால் யாழ்பாணம் எங்கலளூக்கு
          அமெரிக்கா என்ன சொர்கத்துக்கும் மேல்.Soorya
       Posted on 03/06/2010 at 2:22 pm
      நீங்கள் என்னதான் சொன்னாலும் தான் பிடித்த முயலுக்கு மூன்றுகால் என்று
      பிரசங்கம் செய்பவர்களை ஒருபோதும் மாற்ற முடியாது.
      Reply Ilangkumaran
   Posted on 03/05/2010 at 6:47 am
  காத்தான் என்ற கிருஸ்ணகுமார் மாதகலைச் சேர்ந்தவர் . கந்தரோடை என்று
  குறிப்பிட்டிருப்பது தவறு .
  Reply அயலவன்
   Posted on 03/05/2010 at 10:24 am
  பிரபாகரனைப் பற்றிய அய்யரின் கருத்துப்படி அவர் கொண்ட கொள்கைதான் அவரைக்கொன்று
  விட்டது.தான் திருமணம் செய்ததன் பிற்ப்பாடு கொள்கையை மாற்றியது போல
  கால்த்திற்கேற்றவாறு கொள்கைகளை மறுபரிசீலனை செய்து மாற்றியிருந்தால் இன்நிலை
  வந்திருக்கமாட்டாது.
  Reply ethayam
   Posted on 03/05/2010 at 10:48 am
  “ஐயர் பார்த்த பிரபாகரன் பதின்மத்திலும்இ இருபதுகளிலும் இருந்தவன். முப்பதுஇ
  நாற்பதுஇ ஐம்பதில் இருந்த பிரபாகரனைப் பற்றிக் கூட இருந்த பொட்டம்மான் தான் சொல்ல
  வேண்டும். ”
  வேலாயுதம் மகேஸ்வரி வரை, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வரை ஒருவரையும் விட்டு
  வைக்காத பிரபாகரனைப்பற்றி சொல்ல பொட்டம்மான் எதற்கு? ஒரு சின்னக் குழந்தையே
  போதும். வந்து விட்டார்கள் நியாயம் சொல்ல!
  Reply அயலவன்
   Posted on 03/05/2010 at 11:06 am
  /பிரபாகரன் முகாமிற்கு வந்தால் யாரும் சல்யூட் கூட வைப்பதில்லை. என்ன புருடா
  விடுகிறீர்கள். இருகை கூப்பி வணக்கம் தெரிவிக்கும் பாணியில் , ஒரு கையை வைத்து
  நெஞ்சடியில் வணக்கம் செய்வர் கொடிக்கு. கை உயர்த்தப் படுவதில்லை./
  சொல்லப்போனால் இதுவும் தனது தற்பாதுகாப்பிற்க்காகப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
  என்றும் கொள்ளலாம்.இதனை தப்பாக நான் கருதவில்லை இதுவும் பிரபாகரனின்
  தந்திரோபாயத்தில் ஒன்று. /16 வயதில் பார்த்த மனிதன் 30, 40 ஒரு மாதிரி இருக்க
  வேண்டியதில்லை. / மிகவும் சரி ஆனால் மனிதனிற்க்கு மரபணு என்று ஒன்று
  இருக்கின்றது.அதிலிருந்து வரும் குணத்தை மாற்றுவது இயலாது என்றே நான்
  எண்ணுகின்றேன்.இதனைத்தான் நமது முன்னோர்கள் “சாதிப்புத்தியைக்” காட்டிவிட்டான்
  என்று கூறுகின்றார்களோ என நான் எண்ணுவதுமுண்டு . /தென்னிந்திய பாடல்களைக்
  கேட்கக் கூடதென்று யாரும் கட்டளை பிறப்பிக்கவில்லை. /இந்தக்கட்டளை எழுத்து மூலம்
  பிறப்பிக்கவில்லை என்றே நினைக்கின்றேன்.அதனால் இதைப்பற்றி பெரிதாக
  அலட்டிக்கொள்ளத்தேவையில்லை. காரணம் வதந்தி பரப்புவோர்தான். அதுவும் ஒரு
  சிலருக்கு காது கம்மியாக் கேட்டால் சொல்லவும் வேணுமா?
  Reply
    முனி
     Posted on 03/21/2010 at 4:42 am
    உங்கள் மரபணு ஆராய்ச்சிப் படி தமிழர் எந்தச் சாதிப் புத்தி உடையவர்கள்? எசமான
    குடிமைக் கள்ள உறவுகள் காலங்காலமாய் தமிழரில் இருந்ததால், மரபணு முறையில்
    சாதிக் குணங்களை விளக்க முடியாது. மனிதாபமும் நாகரீகமும் அற்ற தமிழ்ச் சாதி
    அமைப்பே இந்த புத்தியீனத்திற்கு காரணம்.
    - முனி
    Reply sittarivan
   Posted on 03/05/2010 at 2:37 pm
  இந்த வரலாற்ரை எழுதிக்கொண்டிருப்பவர் புலிகள் அமைப்பின் மிகமுக்கிய மூத்த
  போராளிகளில் ஒருவர் என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம். அவர்
  சொல்லும் வரலாற்றில் நீங்கள் தவறுகளை காண்பின். அதற்கான சரியான தகவல்களை
  பின்னூட்டத்தினூடாக வழங்குவதன் மூலம். எழுதுபவரையும் வரலாற்றையும்
  நெறிப்படுத்திக்கொள்ளலாம்.தேவையற்ற நாலாந்தர விமர்சனங்களை வைப்பதன்
  மூலம்.வரலாற்றைத்தெரிந்த வேறுசிலர் கூட வலாற்றை பதிவு செய்வதற்கு விரும்பாத சூழல்
  ஏற்படும்.இதன்மூலம் உண்மையான வரலாறு இருட்டடிப்பு
  செய்யப்பட்டுவிடும்.புஸ்பராஜா,ஐயர் போன்றவர்களைத்தொடர்ந்து,வரலாற்றில்
  இருந்தவர்களும் வலாற்றை நன்கு தெரிந்தவர்களும் வரலாற்றை பதிவு செய்வதன் மூலம்
  இறுதியில் ஒரு சரியான வரலாற்றுப்பதிவு தமிழ்மக்களுக்குக்கிடைக்கும்.ஆகவே வரலாற்றை
  எழுதத்துணிந்தோருக்கு ஆக்கமும் ஊக்கமும் வழங்குவதே சாலப்பொருந்தும் என்பது
  சிற்றறிவுடையோனின் கருத்து.
  Reply எதிர்வு
   Posted on 03/05/2010 at 4:56 pm
  புனையப்பட்ட ஹிட்லர்தனம் பற்றி
  பிரபாகரனை அழித்த உறுதிப்படுத்தலின் பின் அய்யரின் புதிதான இனியொரு
வார்த்தைகளில்:
  ” சுபாஸ் சந்திரபோஸ், வாஞ்சிநாதன் போன்றவர்களை வாசிக்கும் இவர் அவர்கள் மீது
  மிகுந்த அனுதாபத்தைக் கொண்டிருந்தார். தவிர ஹிட்லர் மீது கூட பிரபாகரன் மிகுந்த
  மதிப்பு வைத்திருந்தார். இவ்வாறான விசித்திரக் கலவைக்கு எந்த அரசியலும்
  இருந்ததில்லை. இந்த மூவரும் இராணுவ வழிமுறையில் வெற்றிபெற்றவர்கள் என்பது தான்
  காரணமாக இருந்தது.”
  பிரபாகரனை அழித்தொழிக்க செய்யப்பட்ட பிரச்சாரமாக(2009 /02 /16),இன்றைய இலங்கை
  அரசின் அடிவருடியாக இருக்கும் ராகவனின் வாத்தைகளில்:
  ”Prabhakaran also had that idea, but strangely, he was also inspired by
  Hitler, so he had a copy of Mein Kampf. He also was inspired by Bhagat Singh
  and Subhas Chandra Bose. It was a strange combination at one level. I think
  his idea was about Jewishness and the State and the formation of Israel on the
  one hand, and then the idea of eliminating the “other” came from Hitler.’
  http://kafila.org/2009/02/16/interview-with-ragavan-on-tamil-militancy-part-i/
  இந்த விசித்திரக் கலவைக்கு(strange combination ) அய்யர் ஆதாரம்,விளக்கம் முதலில்
  தரட்டும்.என் விளக்கம் தொடர்வேன்.
  Reply
    JAMES FREDRIC
     Posted on 03/06/2010 at 5:20 pm
    “கடவுள் பாதி,மிருகம் பாதி, கலந்து செய்த கலவை நான்…”.என்னய்யா குழப்பம்
    இது.இதுதான் தெரிகிறதே,பின்நவீனத்துவ வாதிகள்.இதற்கு இந்தியாவில் பல உதாரணங்கள்
    இருக்கிறது,சந்திரபாபு,அசோகன்,காக்கா
    ராதாகிருஷ்ணன்,வி.கே.ராமசாமி,….போன்றோர்கள்.அதாவது “இலங்கைத் தமிழருக்கு
    இனப்பிரச்சனை என்பது புலம் பெயர்ந்த நாடுகளில் இல்லை”,”சமூக பிரச்சனைதான்
    உள்ளது”!.அதுவும் புலம்பெயர்ந்த நாடுகளின் “புறச்சூழல்களினால்”,மெது,மெதுவாக
    உருமாறிவிடும்.யூதர்களையும் இவர்களையும் ஒத்துப் பார்க்க முடியாது,இது ஒரு
    கேலிக் கூத்து.எனக்கேன் வம்பு,எனது ஆர்வம்,”நிறுவனப்பட்டுபோன தோல்வியை”
    அவ்வளவு சீக்கிரம் மாற்ற முடியாது என்பது(ராஜ பக்ஷே நினைத்தாலும்).பிரபாகரன்
    “பூனைக்கு மணி கட்டினார்”!.பூனைக்கு மணிகட்ட முடியாமல் ஓடியவர்கள்
    எல்லாம்,பூனையைப் பிடிக்கப் போகிறார்கள் என்பதை நம்புவதற்கு நாங்கள் என்ன
    கேணையனுங்களா?.
    Reply ethayam
   Posted on 03/05/2010 at 9:45 pm
  இந்தியக் கடற்பரப்பில் வைத்துக் கொலைசெய்யப்பட்ட கிட்டு எம்மோடு பண்ணைகளில் வேலை
  செய்த இன்னுமொரு போராளி. ”
  கிட்டுவை எல்லாம் ஒரு போராளி என எப்படி ஐயரால் எழுத முடிகிறது? அவரின் ரெலோ
  போராளிகளின் அழிப்பு மற்றும் படுகொலைகள் தமிழினத்தால் மறக்கக் கூடியவையா?
  மற்றும் குமரப்பா மட்டக்களப்பில் பெண்களுக்கு பெரும் தொல்லை கொடுத்தார் என
  மட்டக்களப்பு நண்பர்கள் குமுறுகின்றனர்.
  Reply
    Prince
     Posted on 03/12/2010 at 1:29 am
    ஓம் ஓம் நீங்கள் சொல்றது சரி. டக்ளஸ் தேவாநந்தா ஒரு மிக சிறந்த போராளி,
    குமரப்பா, பிரபாகரன், கிட்டு, செல்லக்கிளி போன்றவர்கள் நிறைய பெண்களை கெடுத்து
    கொலை செய்திருக்கிறார்கள். இப்படி எழுதினால் உங்களுக்கு ok ஆ எதயம் ?
    Reply mamani
   Posted on 03/06/2010 at 2:38 am
  பிரபாகரன் ஒரு சிறந்த கெரில்லா குழுத்தலைவன் . ஒரு மரபு ரீதியான இராணுவத்திற்கு
  தலைதாங்கும் நுண்ணறிவோ, ராஜதந்திரமோ அவரிடமிருக்கவில்லை .புலம்பெயர் தமிழரால்
  உசுப்பேத்தி வளர்க்கப்பட்ட ஒரு உல்லாச போராளி?
  Reply THOTTA
   Posted on 03/06/2010 at 8:58 am
  பொதுவாழ்க்கைக்கு வரவேணும் எண்டால்…தியாக உணர்வும், அர்ப்பணிப்பும் நிச்சயம்
  இருக்கவேண்டும்.
  புலிகளிடத்தில் அதுநிறயவே இருந்திருக்கிறது.அதனால்தான் தமிழ் மக்கள் எல்லாரும்
  புலிகள் பின்னால் சென்றோம். புலிகளை குறை சொல்லும்நீரும் உமது நண்பர்களும்
  களத்தில் இறங்கி தமிழ் மக்களை வழிநடத்தி இருக்கலாம்தானே..? அந்த தியாக உணர்வும்,
  அர்ப்பணிப்பும் உமக்கு இருந்திருக்குமானால்நீர் எப்பவோ உயிரை அல்லவா
  விட்டிருக்கவேண்டும். இவ்வளவு அக்கறையாய் புலிகளை குறை சொல்லும்நீர் இவ்வளவு
  நாழும் எங்கு போனீர். இன்று புலிகள் இல்லதா போது ..கிட்டு கெட்டவன்..குமரப்பா
  பெண் பித்தன் எண்டு கண்டு பிடிப்பு சொல்லுறீர்.
  மாற்று இயக்கங்களை புலிகள் அழித்துவிட்டார்களே எண்டு சொல்லும்நீர்….ஏன் மாற்று
  அமைப்புகள் எல்லாம் ஒன்று சேர்ந்து புலிகளை அழித்து இருக்கலாம் தானே. ஏன் அதை
  நீங்கள் செய்யவில்லை.. அந்த வீரம் கூட இல்லாதநீங்கள் எப்படி சிங்கள இரணுவத்தை
  எதிர்த்து இருப்பீர்கள்
  உண்மையில் புலிகள் விட்ட தவறுகளை விட.. அவெர்களை எதிர்த்தவர்கள் தான்
  தவறுகளையும், அனியாயங்களையும் மிக அதிகமாக தமிழ் மக்களுக்கு செய்து
  விட்டார்கள்.அது உண்மை என்றபடியால்தான் தமிழ் மக்கள் என்றும் புலிகள்
  பின்னால்நிக்கிறார்கள்.
  .நண்பரே” ஒருவர் ஓடின் பாத்து ஓடு, ஊர் ஓடின் சேர்ந்து ஓடு”.மண்ணின்
  விடுதலைக்காய் மக்கள் புலிகள் பின்னால் ஓடும்போது.. நீரோ…….
  Reply
    Naren
     Posted on 03/06/2010 at 1:16 pm
    அட்த்தானே பார்த்தேன்!!!.. என்னடா “தோட்டா” காட்டானை காணவில்லையே என்று. நீர்
    நெடியவன் என்ற கொடியவன் பின்னால் நிற்பது எல்லோருக்கும் தெரிந்த விடையம்.
    ஆமா!!. எங்கே சார் போயிருந்தீர்கள் இவ்வளவு காலமும். ஓ!!! உங்கட தோட்டாவாலே
    யாரையாவது குருவி சுடுறமாதிரி சுடப்போனீர்களோ?… நீங்கள் குருவி சுடப்போங்க!
    கலெக்சன் பண்ணப்போங்கோ! இல்லை கொத்துரொட்டி வியாபாரத்தையும் பண்ணப்போங்க!!
    இல்லை புலிக் கொடியை இறக்கி வைத்துவிட்டு வெள்ளைக் கொடியை தூக்கிகொண்டு
    எங்கே வேணுமெண்டாலும் போங்க!.. என்ன வேணுமென்டாலும் பண்ணுங்க சார்.. ஆனால்
    அப்பப்போ இங்கேயும் வந்து எட்டிப்பாருங்க ஒருதடவை!! ஏன்னா….. நாங்களும்
    கொஞ்சக் கல்லுகளை பொறுக்கி வைச்சுக் கொண்டு காத்திருக்கிறமில்ல!.. இல்லாத
    உங்க தலைவர் இருக்கிறாரா இல்லையா என்பது தெரியாமலே இருக்கிறார் என்று சொல்லி
    “கலெக்சன்” பண்ணும் நீங்களெல்லாம் வன்னி மக்களாகிய எங்களுக்கு
    வழிகாட்டபோறீங்களோ?… நீங்கள் எங்களுக்கு முள்ளிவாய்க்கால் வரைக்கும்
    வழிகாட்டியதும் பின்னர் உங்களது தமிழ்த் தேசியகூட்டமைப்பிலிருந்து கே.பி
    வரையிலும் உள்ள உங்களது மிச்சம் சொச்சப்
    பேர் எல்லாம் இப்போ அரசாங்கத்துக்கு வழிகாட்டிக் கொண்ருப்பதுவரைக்கும்
    போதும் ராசா!.. அடுத்து
    நீங்கள் எப்போ அரச பக்கம் மாறுவதாய் உத்தேசம்?… வெள்ளைக் கொடியில்
    ஆரம்பித்தீர்கள்
    ஒவ்வொன்றொவொன்றாய் விழுந்து கொண்டேயிருக்கின்றீர்கள்.. சும்மாவா!!!
    மேதகுவின் வீரப்பரம்பரையில் வந்தவர்களல்லவா?.. வ..ர்..ட்..டு..மா?.. தோட்டா
    சாரே!!
    Reply
      THOTTA
       Posted on 03/07/2010 at 7:33 pm
      அய்யா நரேன் “நக்குண்டார் நாவிழந்தார் “… மகிந்த கட்டித்தந்த மாழிகையில்
      இருந்து ” மாரித்தவளையாய் ” கத்தும் உமக்கு, உலகத்தமிழினத்தின் ஒரே தலைவர்
      மேதகு. பிராபகரனையும் ,புலிகளையும் விமர்சிக்க எந்த அருகதையும் இல்லை அய்யா.
      உரத்துகத்துவதால் ஒருநாளும் “பொய்கள்” உண்மை ஆகிவிடமுடியாது. அய்யாநரேன் ”
      பலவீனமானவர்களின் குரலே அடிக்கடி பயத்தில் ஓங்கி ஒலிக்குமாம்.அதனால்தான்நீர்
      இங்கு வந்து அடிக்கடி ஓலமிடுறீர்.
      ஒரு பெரிய வட்டத்தை சிறிய வட்டம் ஆக்க வேணுமெண்டால், அதற்குப்பக்கத்தில்
      இன்னுமொரு பெரிய வட்டம் போடவேணும் என்று சொல்வார்கள்.நீரும் உமது சிறு
      கூட்டமும் செய்த தவறுகளையும், தப்பு தாளங்களையும் மறைக்க , புலிகள் உலகமகா
      தவறு விட்டார்கள் எண்டு கண்ணீர் வடிக்கிறீர் . “ஆடுநனையுது எண்டு முதலை விட்ட
      கண்ணீர் அல்லவா உமது எண்டு எம் மக்களுக்கு தெரியத என்ன.
      தமிழ் மக்கள் “பூனைகள்” அல்ல, அவெர்கள் எல்லாம் “புலிகளே”. கண்ணை மூடினால்,
      உலகம் இருண்டு கிடக்கும் , பால் குடிக்கலாம் என்று அவெர்கள் ஒரு போதும் கனவு
      காண மாட்டார்கள். மாவீரனுக்கு ஏதடா மரணம். சொந்த இனத்தின் விடுதலையை
      காட்டிக்கொடுத்தும்,கொச்சைப்படுத்தியும் பேசும்நீர் எல்லாம் உயிரோடு
      இருந்தும் “பிணம்” தான் . காலம்காலமாய் அடிமை வாழ்வை ருசித்த உமக்கு ,
      சுதந்திர வாழ்க்கை கசப்பாய்தான் இருக்கும் .
      தமிழ்மக்களின் உரிமையைப்பற்றி பேசினாலே அவெர்கள் எல்லாம் என்ன
      புலியா.டக்கிளஸ் சொந்த கட்சியின் சின்னத்திலேயே கேட்க வக்கில்லாமல்
      இருக்கும்போது, இவெர்கள் தான் எமக்கு சுதந்திரம் வேண்டித் தரப்போறர்களா.
      நீர் எடுத்து வைதிருக்கும் கல்லால் உமக்கெ எறியும். ஏன் என்றால் , தப்பு
      செய்யாதவர்கள் மட்டுமே என் மீது கல் எறியநான் அனுமதிப்பேன். நெடியவன் ,
      கறுப்பா , செவப்பா…..குண்டா , ஒல்லியா எண்டு இன்னும் சொல்ல முடியுமா.
      Reply
        thurai
         Posted on 03/08/2010 at 10:36 am
        தோட்டாவே உமக்கு நல்ல பெயர்தான். சுதந்திரம், விடுதலை பற்ரிப்பேச
        புலிகளிற்கு என்ன தகுதியுண்டு சொல்லுங்கள்.
        உங்களின் துப்பாக்கிகள் அப்பாவித்தமிழரின் தலைகளிலும்
        வாய்க்குள்ளேயும் குண்டுகளை துளைத்தனவே..
        தமிழனைத் தமிழனே மிதித்தாலும், மதிக்காது விட்டாலும்
        மதித்துநடவெனெ சொல்லாது விட்டாலும் கொல்லாதே என் புலிகளின் தலவர் புத்தி
        சொல்லியிருக்கலாம் அல்லவா?
        துரை
        Reply Naren
       Posted on 03/07/2010 at 9:36 pm
      ஐயா! “தோட்டா” சும்மா… அட்டகாசமாய் ஆணியடித்தமாதிரி பதில்
      சொல்லியிருக்கின்றீர். பனங்காயை பினைஞ்செடுத்து பானையிலே வடிச்செடுத்து
      பாய்தனிலேபோட்டு காயவைத்த “பினாட்டு” மண்ணோடு சேர்ந்து கடிபட்டால்
      எப்படியிருக்குமோ அப்படியே நச்சென்றிருக்கு சார்ர்ர்ர்…. நீர் சொன்ன
      அத்தனையையும் வைச்சு உங்கள் முன்னாள் “கூட்டத்தினரின்” உறுப்பினரும் இன்நாள்
      துரோகியுமான “சிவாயிலிங்கத்தார்” வாயைப் பிளந்தால் எப்படியிருக்குமோ
      அப்படியே உம்மையும் கற்பனை பண்ணிப்பார்த்தேன். ஆமாம் நீங்கள் இப்பவும் அதே
      கருணாவையும் அதே டக்கிளசையுமே திரும்ப திரும்ப துரோகி துரோகி என்று
      சொல்லிக் கொண்டிருந்தால் உங்கட கே.பி. மற்றும் உங்கள் தமிழ் தேசியக்
      கூத்தமைப்பு உறுப்பினர்கள் மற்றும் ஜோர்ஜ் மாஸ்டர்- தயாமாஸ்டர் தமிழினி
      அக்கா போன்றோரை எந்த லிஸ்ட்டில் சேர்ப்பதாம்?. ஆடு நனைகிறது.. ஓநாய்
      அழுகிறது.. பூனை பால்குடிக்குறது… முல்லைத்தீவுக் கிணத்துக்குள்ளேயும்
      முள்ளிவாய்க் காலுக்குள்ளேயும் தவளை கிடந்தது. பின்னர் கிணத்துக்குள்ளே
      இருந்து
      வெளியேவர வெள்ளைக் கொடியைத் தூக்கிக் கொண்டு போன சமாச்சாரம் எல்லாம்
      எங்களுக்கும் தெரியும் “நைனா” இனி சுதியை மாத்திப்போடும்… ஆமா!.. நீர்
      எப்பவோ ஒரு தடவை நானும் வன்னி என்று சொன்ன ஞாபகம் உண்டு.. தட்டித்தவறியும்
      அந்தப்பக்கம் வந்திடாதேயும் காரணம் அங்கேயெல்லாம் இப்போ சிங்களவன்
      குடியேறிக் கொண்டிருக்கின்றான். ஒரு போலிஸ் ஸ்டேசனே இல்லாத இடங்களுக்கு
      உங்கள் ‘மேதகு’ என்னமாய் சுதந்திரம் வாங்கித்தந்திருக்கின்றார் பார்த்தீரா?..
      இனியேது
      சுதந்திரம்…இனியேது சுதந்திரம்…. இனியேது சுதந்திரம்… இனியேது மூத்திரம்
      என்று கேளுங்கோ எல்லாம் கிடைக்கும். வேண்டுமென்றால் உமக்காக ஒரு வரியில்
      கடைசியாய் ஒருவிடையத்தை குறிப்பிடட்டுமா?. அப்படியே எழுதிவைத்துக் கொள்ளும்.
      “தமிழனின் தாகம் எங்கள் மேதகு பிரபாகரனின் வெள்ளைக் கொடி” ரொம்ப உணர்ச்சி
      வசப்பட்டிடாதீங்கோ?.. உணர்ச்சிவசப்பட்டால் கோமணத்தோடதான்
      நிக்கவேண்டிவரும்… அப்போ!… வ..ர்..ட்..டு..மா..? தோட்டாச்சாரே.
      Reply
        THOTTA
         Posted on 03/08/2010 at 1:33 pm
        அய்யா ,நரேன்….தலைவரும்..தளபதிகளும் தங்கள் முடிவில் தெளிவாய்தான்
        இருந்தவை. பாவாம்நீங்களும் உங்கள் கூட்டமும்தான் றொம்ப குழம்பிப்
        போட்டியள்.
        இந்தியன் இராணுவத்துடனான் மோதலில் வடக்கு ,கிழக்கில் 2 லச்சம் இந்தியத்
        துருப்போடு, இரண்டாயிரம் போராளிகளோடுதான் தலைவரும் தளபதிகளும் இரண்டு
        வருடம் போரிட்டனர். கூடவே எட்டப்பர் கூட்டமும் வேற. ஆனாலும் தலைவரும்.
        தளபதிகளும் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியே சென்றனர். ஏன்
        என்றால் போராட்டத்தை அப்போது முடித்துவைக்கும் காலம்,சூழ்நிலையும் சரியாக
        வரவில்லை.
        சுமார் 20 வருடங்களிற்குப் பிறகு அதே காட்சி.வடக்கு,கிழக்கில் 2 லட்சம்
        வரையான சிங்களப்படை.கூடவே அதே எட்டப்பர்கள்.அது மட்டுமா..தென்னாசியாவின்
        சிறந்த தொழில்னுட்பங்களும், ஆயுதங்களும்.மோதல் தனியே சிங்களவருடன் இல்லை,
        இந்தியா, சீனா , பாகிஸ்த்தான், றஸ்யா.
        இந்தியாவிற்கோ புலிகளை அழிக்க வேண்டும்
        சீனாவ்ற்கோ இலங்கையில் கால் ஊன்றவேண்டும்
        றஸ்யா, பாகிஸ்த்தானுக்கோ தங்கள்நவீன ஆயுதங்களை பரிட்ச்சித்துப் பாக்க
        வேண்டும்.
        அமேரிக்காவிற்கும் அதன் கூட்டாளிகளுக்குமோ புலிகளை அடக்கி ஒடுக்கி தங்கள்
        வழிக்கி கொண்டு வர வேண்டும்.
        வெளிப்பார்வைக்கு என்னவோ சிங்கள்வர் , புலிகள் மோதல்.ஆனால் உள்ளுக்குள்
        உண்மையில் இதுதான்நடந்தது.
        இவ்வளவையும் எதிர்த்துதான் புலிகள் 2 வருடம் போரிட்டார்கள்
        கிளிநொச்சி வீழ்ச்சிக்குப் பிறகு இந்த 4 ஆம் கட்டப் போரில் வெல்ல
        முடியாது என்று தலைவருக்குநன்றாஅகவே தெரியும்.
        முரசுமோட்டை, விஸ்வமடு என்று பரந்தன் வீதி வழியே புதுக்குடியுருப்பை
        இராணுவம்நெறுங்கும் போதுதான் ,புலிகளால் ஒரு பெரிய ஊடறுப்பு
        தாக்குதல்நடத்தப்பட்டு இராணுவம் ஒட்டிசுட்டான் வரை பின் வாங்கி
        இருந்தது.அப்போது கோட தலைவர்நினைத்து இருந்தால் கூட, ஒட்டிசுட்டான் வழியே
        மணலாறுக்கொ எங்கோ தப்பிப் போய் இருக்கலாம். ஆனால் அவெர் போகநினைக்க
        வில்லை.
        புதுக்குடியிருப்பை இறாணுவம்நெருங்கும் போது, புதுமாத்தளனிலிருந்து இரண்டு
        புலிகளின் விமானங்கள் கொழும்பைநோக்கி பறந்தனவே. ஏன் தலைவரும், மகனும்
        அதில் ஏறிப் போய் இருக்கலாம்தானே.ஆனால் அவெர்
        போகநினைக்கவில்லை.முள்ளிவாய்க்காலில் புலிகளின்நீர் மூழ்கிக்கப்பல் கண்டு
        எடுக்கப்பட்டது.ஓடும்நிலையில் இருந்தும்,அது பாவிக்கப் படவில்லை,அது
        ஏன்!….புலிகளின் முக்கிய தளபதிகள் இறக்கும் போது , தாங்கள் இன்னார்தான்
        என்று உறிதிப்படுத்த , சிறிலங்காவின் அடையாளாஅட்டையை உடன் வைதுக் கொண்டே
        இறந்தார்கள்.இவையெல்லாம் ஏன் ,எதற்கு என்று சிந்திக்கிற அறிவோ,படிப்பொ
        அய்யா உம்மிடம் இல்லை.
        போராட்டம் அழிக்கப் படவில்லை.தலைவரால் சடுதியாக முடிக்கபட்டு, அடுத்த
        கட்டத்துக்குநகர்த்தப் பட்டிருக்கிறது.
        அக்குனிக்குஞ்சு ஒன்று கண்டேன்
        அதை அங்கொரு காட்டினில் பொந்தினில் இட்டேன். தொடர்ந்து இந்த பாரதியார்
        பாடலைப் படியும் . கூடவே துரையையும், மாமணீயையும் சேர்த்து வைத்து
        சொல்லிக் கொடும்.
        எங்கள் தலைவனின் தீர்க்கதரிசனம் கண்டுநீங்கள் எல்லாம் “வாய் ” பிளக்கும்
        காலம் வெகு , வெகு விரைவில் வரும் அய்யாநரேன்.
        Reply
          Naren
           Posted on 03/08/2010 at 4:01 pm
          30 வருசமாய் உம்ம தலைவர் எதை சொல்லி… சொல்லி…சொல்லி.. தமிழ் மக்களை
          பேக்காட்டி வந்தாரோ அதையேதான் நீரும் சொல்லியிருக்கின்றீர் நீர் சொன்ன
          விடையங்களை அறிந்து கொள்ளுவதற்கு நான் ஒன்றும் வன்னிக்காட்டில்
          விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கவில்லை காரணம் உங்களுடைய
          கட்டுப்பாட்டுபிரதேசங்களில்தான் தொலைபேசி பாவிக்கூடாது என்று சொல்லி
          அங்கு வசித்த அப்பாவி வன்னி மக்களிடம் இருந்து எல்லாவற்றையும் பறித்து
          விட்டீர்கள் சுதந்திர ஊடகங்கள் எதனையும் சுயாதீனமாக செயற்படவில்லை
          வெளிநாட்டில் இருக்கும் ஒருவருடன் அவரத உறவினை மூன்று நிமிடங்களுக்கு
          மேல் யாரையும் பேச அனுமதிக்கவில்லை காரணம் உங்க வண்டவாளங்கள் யாவும்
          அறுந்து போய்விடும் என்று. இது போக வன்னியில் இருந்து ஒருவரையும்
          வெளியேற விடவில்லை வன்னிக்குள்ளும் யாரையும் நுளைய நீங்கள்
          அனுமதிக்கவில்லை வரவிரும்பியவர்களையும் நீங்கள் கடத்திக் கொண்டுபோய்
          கப்பம் கேட்பீர்கள் என்ற பயத்தினால் புலம் பெயர் தமிழர்கள் உட்பட
          இலங்கையின் ஏனைய பிரதேசத்தில் வாழ்ந்த தமிழர்களும் வன்னிக்குள் வரவதை
          நிறுத்திக் கொண்டனர். தவிர உங்களைப்போன்ற வானரங்கள்தான் தலைவர்
          இராஜதந்திர நகர்வை மேற்கொள்ளுகின்றார்/ உள்ளே விட்டு
          அடிக்கப்போகின்றார். தலைவர் முருகனுக்கு சமனானவர் என்று துள்ளிக்
          குதித்தீர்கள். கடைசியல் அவரம் வடபழனி முருகனாகவே காட்சியளித்தது வேறு
          விடையம். அதுசரி.. நீங்கள் உங்கள் தலைவனின் பெருமை வீரம் தீரம் போன்ற
          செயல்களை சொல்லித் தெரிவதற்கு நாங்ககள் என்ன வேற்றுக் கிரகத்திலா
          இருக்கின்றோம் உங்கள் தலைவரின் காலத்தில்தான் நாங்களும் இருக்கின்றோம்
          உங்களது பித்தலாட்டக்கதைகளை உங்களைப்போன்று தலைவன் புராணம் பாடிக்
          கொண்டிருக்கும் பைத்தியங்களுக்கு போய் சொல்லும் நம்புவார்கள்mamani
           Posted on 03/09/2010 at 9:25 am
          தோட்டா நான் ராஜபக்ஸவிடம் 10,000 வாங்கி அதில் 8,000 புலிகளிடம்
          கொடுத்தால் என்னை எப்படி அழைப்பீர்கள்
          1) துரோகி 2) தியாகி 3) சாணக்கியன் 4) தீர்க்கதரிசி புரியுதா நெடியவன்
          கணக்கு தோட்டா ??mamani
     Posted on 03/07/2010 at 10:42 am
    தோட்டா உசுப்பேத்தியது போதும். வன்னியில் அல்லல் பட்ட 10 பேரையாவது
    நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ சந்தித்துவிட்டு உண்மையை தெரிந்து கொள்ளும்
    அவர்களிற்கு எப்படி உதவி செய்யலாம் என்பது பற்றி சிந்தியும். அண்ணன் வந்து
    கேள்வி கேட்டா மன்னிப்பு கேட்டு விட்டு வேலையை தொடரும் திரும்பி வந்து
    யாரையும் துரோகி என்று சொல்ல மாட்டார்.
    Reply
      THOTTA
       Posted on 03/07/2010 at 7:51 pm
      மணி உமக்கு முன்னால் உள்ள ” மா” எண்ட எழுத்து மகிந்த கொடுத்த பரிசா….குடுத்த
      காசுக்கு நல்லாய்தான் குலைக்கிறீர். இன்னும்நல்லாய் வாலை ஆட்டி ஆட்டி
      குலையும் சீக்கிரமே, பக்கத்திலிருந்தும் ” பாரதரத்னா” எண்டு ஏதும் விருது
      தருவார்கள். நான் 10 பேரைச் சந்திப்பது இருக்கட்டும் நீர் முதல்லெ நல்ல
      வைத்தியரைப் போய் பாத்து ” ஏன் எனக்கு சுதந்திர உணர்வும் ,நாட்டுப் பற்றும்
      இல்லை எண்டு கேளும். மெனிக்பார்ம் கேம்பிலும், அருணாசலம் கேம்பிலும்தான்
      இன்னும் எனது பெற்றோரும் , உறவுகளும் இருக்கினம்.நீர் எனக்கு கதை
      சொல்லதேயும்.
      பயத்தைகண்டு விடுதலையை விலைபேசுவதும், தோல்வியைக்கண்டு பயந்து ஒடுங்குவதும்
      ,நீங்கள் தான், நாங்கள் அல்லநண்பரே.முடிந்தால் எனது பெற்றோரையும்,
      உறவுகளையும் காட்டிக் கொடும். இன்னும் 100 வருசத்துக்கு உமது வம்சம்
      படுத்துக்கிடந்துகொண்டு சாப்பிடலாம். அச்சமில்லை…அச்சமில்லை……அச்சமில்லை
      உச்சிமீது வான் இடிந்து வீழ்ந்த போதிலும்……
      அச்சமில்லை…அச்சமில்லை…..அச்சமில்லை நண்பரே.
      Reply
        thurai
         Posted on 03/08/2010 at 10:41 am
        இந்தியாவோடு சேர்ந்து இலங்கை அரசாங்கத்திற்கு அடி, இலங்கை அரசாங்கத்தோடு
        சேர்ந்து இந்திய படைக்கு
        அடி.இது என்ன போராட்ட விபச்சாரமல்லவா புலிகள் செய்தது.
        இறுதியில் இலங்கையும் இந்தியாவும் சேர்ந்து அடிக்க ஓட இட்மில்லாம்ல்
        உலக்மெல்லாம் மரண ஓலம் போடவைத்தீர்களே உஙகளை வளர்த்தவ்ர்களை. என்ன காட்சி,
        என்ன காட்சி. துரை
        Reply mamani
         Posted on 03/09/2010 at 9:14 am
        தோட்டா கருத்தை கருத்தால் வெல்லும் அதை விடுத்து பெயர், பிறப்பு ஊர் பற்றி
        எழுதினால் கடைசியில் கோவணம்தான் மிச்சம்
        Reply Soorya
         Posted on 03/09/2010 at 8:24 pm
        உண்மையை திரும்பத் திரும்பச் சொன்னால் அது பொய்யா என்று கேள்வி எழும்.
        ஆனால் பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் உண்மையாகிவிடும் என்று கனவு
        காண்பவரும் உண்டு. இவ்வளவு கசப்பும் காழ்ப்புணர்வும் எங்கிருந்து சிலருக்கு
        வந்ததோ தெரியவில்லை. அர்த்தமில்லாமல் சொன்னதையே மாறி மாறி
        கக்கிகொண்டிருந்தால் ஒருவரும் இதை பொருட்படுத்தப் போவதில்லை. புலிகளும்
        பிரபாகரனும் தமிழருக்கு அழிவைக் கொண்டுவரவில்லை. சிங்களவன்தான் அறுபது
        வருடமாய் தமிழனை அழித்துக் கொண்டிருக்கிறான். இந்த சின்ன விடயம் விளங்காத
        மானிடரை எதற்கு ஒப்பிடலாம்?
        Reply Naren
       Posted on 03/07/2010 at 10:31 pm
      யுத்த நிறுத்த காலத்தில் தங்கள் விடுமுறையைக் கழிக்க இலங்கை சென்றவர்களில்
      யார் வெளிநாட்டில் இருந்து புலிகளுக்கு கப்பம் கட்டினார்கள் யார் யார் கப்பம்
      கட்ட மறுத்தவர்கள் என்று சொல்லி விடுதலைப்புலிகள் என்ற
      உலகப்பயங்கரவாதிகளிடம் எங்கைளக் காட்டிக்கொடுத்து லட்சக்கணக்கில் பணம்
      கறந்தவர்களையும் அவ்வாறு கறக்கமுடியாதவர்களை பங்கர்களில் போட்டு
      கொடுமைப்படுத்திய சம்பவங்கள் எதனையும் நாங்கள் மறப்பதற்கு இல்லை. இருந்தலும்
      உங்களைப்போன்ற ஈனப்புத்திகள் எங்களிடம் இல்லை. யாழ்மேலாதிக்கத்தினரால்
      துரத்தியடிக்கப்பட்ட பிரபாகரன் கும்பலை தண்ணிகொடுத்து வரவேற்று வாழவைத்த
      எங்கள் வன்னி மக்களையே மனிதக்கேடயங்களாகவும் யுத்தக்கேடயங்களாகவும்
      பயன்படுத்தி அந்த மக்களின் பிள்ளைகளை வலுக்கட்டாயமாய் அவர்களின்
      பெற்றோர்முன்னே கதறக்கதற இழுத்துக் கொண்டுபோய் சாகடித்த சம்பவங்களையும்
      நாங்கள் மறப்பதற்கில்லை. அதேநேரத்தில் தனிமனிதவாழ்வின் சுதந்திரத்துக்கு
      தடையாக இனியும் இருக்கப்போறவர்களை கிள்ளியெறியவும் தயங்க மாட்டோம்.
      Reply
        Prince
         Posted on 03/12/2010 at 2:09 am
        அட சூடு சுறணையும் இருக்கு.
        Reply milenium kutti
         Posted on 03/25/2010 at 10:50 am
        தம்பி வன்னி தம்பி.யாழில இருந்து யாரும் புலிகளை கலைக்கவில்லை.மாவீரர்கள்
        யாழ் மைந்தர்கள்தான் அதிகம்.பிரதேசவாதம் கதைபதை தய்வு செய்து நிறத்துங்கள்.
        வன்னியில் நடந்தது ஒரு துன்பியல் சம்பவம்
        Reply a voter
     Posted on 03/16/2010 at 2:59 am
    //மாற்று இயக்கங்களை புலிகள் அழித்துவிட்டார்களே எண்டு சொல்லும்நீர்….ஏன்
    மாற்று அமைப்புகள் எல்லாம் ஒன்று சேர்ந்து புலிகளை அழித்து இருக்கலாம் தானே.
    ஏன் அதை நீங்கள் செய்யவில்லை.. அந்த வீரம் கூட இல்லாதநீங்கள் எப்படி சிங்கள
    இரணுவத்தை எதிர்த்து இருப்பீர்கள்//
    ஆகா… வீரம் பற்றிய புதிய வரைவிலக்கணம்.
    Reply Piraba
   Posted on 03/06/2010 at 2:45 pm
  “ஏன் மாற்று அமைப்புகள் எல்லாம் ஒன்று சேர்ந்து புலிகளை அழித்து இருக்கலாம் தானே”
  what the hell you are talking? didn’t Dougy, Karuna eliminate ltte?
  ltte was meant to be eliminated…finally it happened… ltte’s presence was
  producing several brain dead zombies like this “Thotta”
  Reply
    mamani
     Posted on 03/07/2010 at 10:25 am
    ஏன் மாற்று இயக்கங்கள் விடுதலை நோக்காக கொண்டு இயங்கினவா? அல்லது ஏக
    பிரதிந்தித்துவத்திற்கு ஆசைப்பட்டு வேட்டி கிடைக்குமென கனவு கண்டு கோவணத்துடன்
    மல்லாக்க கிடக்க ஆசைப்பட்டனவா? சேர்ந்து புலிகளை அழிக்க? ராகவனில் தொடங்கி
    கே.பி வரை
    உப தலைவர் எல்லாம் உங்கள் துரோகிகள்தானே? 35000 பேருக்கு சயனைற் மாலை போட்டு
    தான் மட்டும் வாழநினைத்த தலை என்ன மாதுரோகியா? மேதகுரோதியா?
    Reply Kirinjay Ramanathan
   Posted on 03/06/2010 at 4:40 pm
  The reason why Iyer said that most of the early Tamil Tigers didn’t have a
  high education or didn’t even understand English was because he himself did
  not have a high education and he couldn’t even understand English either.
  Prabakharan never admitted at the press conference at Vanni that he didn’t
  understand or couldn’t speak English but rather that he wanted a TAMIL voice
  to be heard. Raghaven and Ponnamon were two of the top Tigers in the early
  movements, and before joining the Tigers they were excelling students and were
  at the the top of there class. The only reason they did not continue on to a
  University level education was due to their involvement in the movement. They
  concluded that the welfare of the Tamil people, their people, was much of a
  important than their education.
  Reply
    நெருஞ்சி
     Posted on 03/06/2010 at 11:41 pm
    ஆங்கிலத்தில் எழுதி,நம்ம காதில பூ வைச்சு,கதை பண்ண வந்திகளோ!
    அந்த இரண்டு பேரும் படிப்பில மட்டங்கள்.சொல்ற மாதிரி தமிழ் மக்களுக்காக அவையள்
    படிப்பை விடல்ல.படிப்பை விட்டதால புலி தங்குமிடமாகப் போச்சு.
    இரண்டு பேரிலும் ஒரு பெரிய ஒற்றுமை என்னண்டா பிரபாகரனுக்கு நல்ல விசுவாசிகளாக
    இருந்தது.
    ஒருவர் இறந்து போனார்,மற்றவர்…
    Reply Mathi
   Posted on 03/06/2010 at 7:45 pm
  ஜயா அவா;களே
  பண்ணையிலும் வெளியிலும் இருந்த இன்னும் சிலரை பற்றி மறந்து விட்டீர்களா அல்லது
  மறைக்க முனைகின்றீர்களா. உணா;ச்சி பத்திரிக்கை வேலை செய்தோர் பின்னால் உங்களுடன்
  NLFT இல் இயங்கிய நபரை பற்றி ஏன் எழத வில்லை
  Reply suganthan
   Posted on 03/06/2010 at 8:48 pm
  “ஏன் மாற்று அமைப்புகள் எல்லாம் ஒன்று சேர்ந்து புலிகளை அழித்து இருக்கலாம் தானே”
  இப்ப என்ன அப்பன் நடந்துமுடிஞ்சிருக்கு.
  Reply
    நெருஞ்சி
     Posted on 03/06/2010 at 11:59 pm
    இந்த பசங்க,தோட்டாக்கு ஜோட்டால அடிக்கிற மாதிரி,தங்கிட இயக்கக் காரனுக
    மகிந்தவோட கூத்தடிச்சோம் என்டு வெட்கமில்லாம சொல்றனுங்க.புலி உட்பூசல்லதான்
    தொலைஞ்சானுக எண்டு பாத்தா,இவனுகளும் உரிமை கோருறானுங்க.இன்னா கடவுளே,நீயும்
    பாத்துக்குன்னே இரு.
    Reply
      நெருஞ்சி#2
       Posted on 03/08/2010 at 3:03 am
      அண்ணே பிரபாவும் பிரேமதாசவும் ஒரு காலத்தில் தேனிலவு கொண்டாடினார்களே ..அது
      போல தான் இதுவும் :)
      ஹெஹெஹ்
      Reply
        THOTTA
         Posted on 03/08/2010 at 2:14 pm
        தலைவர் , பிறேமதாசாவோடெஒரு வருசம் தான் தேனிலவு கொண்டாடினவர். ஆனால்
        உங்கட ஆக்கள் , டக்கிள்ஸ் அன் கோ.. ஆட்சிக்கு வாற எல்லா
        ஜெனாதிபதிமாருடனும், 20 வருசமாய் குடும்பம்நடத்தி குட்டிகளும்
        பெத்திட்டினம் , அது தெரியதோ உமக்கு..
        Reply
          thurai
           Posted on 03/08/2010 at 3:16 pm
          உருப்படியான் பெண் வாழ்நாள் முழுக்க இருப்பாள், காசிற்கு வந்தவள் ஒருநாள்
          தான்
          இருப்பாள் இதுவும் தெரியாதா தோட்டாவிற்கு. துரைமணியம்
           Posted on 03/08/2010 at 5:05 pm
          20வருசமேண்டா குடும்பம்நடத்தி குட்டிகளும் பெத்திடலாம். ஒரு வருசம் தான்
          தேனிலவு கொண்டாடினதேண்டா? அது நாறுதேல்லோ? உந்த ஒவ்வொருத்தரோட மாறி மாறி
          தேனிலவு ஆலதானே இண்டைக்கு இந்த நிலைமை. அண்ணை இதைத்தைதான் விபச்சாரம்
          எண்டு சொல்றது. அரசியல் விபச்சாரம். கடசியா குடும்பமும் இல்லை, தானும்
          இல்லை. அண்ணை இப்படியெல்லாம் எழுத வைக்காதீங்கோ. எல்லாருக்கும் இரண்டு
          பக்கம் உண்டு. ஆதால இங்கை ஆக்கபூர்வமான கருத்துக்களை இந்த ஐயர் எழுதுற
          தலைப்போட சம்பந்தப்பட்ட கருத்துகளை எழுதுங்கோ. மற்றவையும் தான்.thilaga
   Posted on 03/06/2010 at 10:15 pm
  Iya…. How can you write now because of Prapakaran.If he did not fight until
  now, you could not live in this world.If Prapakaran did not band other moments
  like plot,telo,Eprlf.Otherwise they would have killed by Srilankan forces.That
  is why they sill live and write against Prapakaran.this people(
  peravai,plot,telo and some others ) should say thank to Prapakaran.
  Reply ஈழவன்
   Posted on 03/07/2010 at 1:29 am
  ஈழத்தமிழரின் பிரச்சினை இங்கு எல்லோரும் பேசிக்கொள்வது போன்று இலகுவானது அன்று.
  அன்றி முடிந்து போன சிக்கலும் அன்று. ஈழத்தமிழருக்கு மிகப்பெரிய அநீதி
  இழைக்கப்பட்டுள்ளது. இதனை சாதாரண தெருச்சண்டை விடயம் போல பேசிக்கொள்வது வேதனை
  தருகிறது. தமிழரின் இனப்பிரச்சினையில் பாகுபாடின்றி எல்லாப் பெரிய மனிதர்களும்
  சம்பத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் மனம் என்று ஒன்று உள்ளது.
  ஆகவே மனச்சாட்சி என்பதுவும் இருக்கும். அப்படி நிச்சயம் நம்புவோம். பல்லாயிரம்
  மக்களைக் கொன்ற பின்னர் தான் அசோகனுக்கு புத்தி தெளிந்தது. அதன் பின்னரே புத்த
  மதத்திற்கு மாறினான். அது சரித்திரம். ஆகவே அண்மைய நமது மக்களின் பேரிழப்பை
  மனதில் கொள்வோம். கருத்துக்கள் கூறுமுன்னர். தவிர இது இயக்கங்களின் பிரச்சினை
  அல்ல. தமிழினத்தின் மொத்தப் பிரச்சினை. இங்கு படிப்போர் குழம்பி விடாதீர்கள்.
  Reply
    JAMES FREDRIC
     Posted on 03/07/2010 at 8:21 am
    “கறுவாடு மீனாகாது”!.நீங்கள் கூறும் வரலாறு நிகழ்ச்சிகளை அப்படியே
    பொருத்தமுடியாது.”பல்லாயிரம் மக்கள்” கொல்லப்பட்டது,தெளிவாக
    திட்டமிடப்பட்டு(ருவாண்டா போல் உணர்ச்சி மயப்பட்டல்லாமல்),படிப்படியாக
    நடத்தப்பட்டது.இதைக் கூறும் உங்களைப் போன்றோர் அதை
    தடுத்திருக்கலாம்!.”அரசியல் இலாபம்” கருதி அதை விட்டுவைத்தீர்கள் என்று
    பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்!.ஐயர் எழுதும் கட்டுரையில்
    ராகவனையும்,நிர்மலாவையும்,”செகண்ட் ஆஃப் மற்றும் கிளைமாக்ஸில்” பில்டப்
    பண்ணுவதாக தெரிகிறது.”அரலி மாளிகையுடனான உறவு” பிரேமதாஸா காலத்தை
    நினைவூட்டுகிறது(அசோக சக்கரவர்த்திக்கு “கவுன்ஸிலிங்” செய்து கையகப்
    படுத்த).”புறச்சூழல்களே” இயக்கம் துவங்க நிர்பந்திக்கப் பட்டது.”சாகச
    உந்துதலினாலேயே” வே.பிரபாகரன் “பூனைக்கு மணி கட்டினார்”!,கட்டிவிட்டு பிறகு
    என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தார்,அப்போதே இது
    “அவர்களின் சட்டரீதியான உணர்ச்சிப் போராட்டங்கள் ஆயுதப் போராட்டமாக எம்மால்
    முன்னெடுக்கப்பட்ட போது இந்தப் படித்த இளைஞர்கள் எவரையுமே காண முடிவதில்லை.
    தான் தனது குடும்பம் தாம் சார்ந்த சமூகமும் அதன் மத்தியிலான அந்தஸ்து என்ற சமூக
    வரம்புகளுக்குள் ஒளிந்து கொண்டார்கள்.”நடந்தது.இதனால் கோபம் கொண்ட பிரபாகரன்
    நிலைதடுமாற,பல்வேறு உளவு நிறுவனங்கள்,தங்கள் பணங்களை அள்ளி வீசி விஷயங்களை
    தத்து எடுத்துக் கொண்டனர்.சிங்கள பக்கத்தில் அவ்வாறு இல்லாமல்,புத்தமத?,சிங்கள
    பேரினவாதம்? தெளிவான திசையில் “நிறுவனப் படுத்தப் பட்டிருந்தது”!.தமிழர்களின்
    படுகொலையும்,தோல்வியும் அவ்வாறே நிறுவனப் படுத்தப் பட்டுள்ளன்.இதில்
    இந்தியாவின் பங்கு “ஆர அமர” தெளிவாக இணைந்துள்ளது.இதில் ரணிலுக்கு போலை
    பிடித்தோ, ராஜபக்ஷேவுக்கு போலை பிடித்தோ ஒன்றும் ஆகப்போவதிலை.இதில்
    பின்நவீனத்துவ – என்.ஜி.ஓ. – கத்தோலிக்க வாதிகள்,இலங்கையில் இந்தியாவின் சீன
    சம்பந்தமான முரண்பாடுகளில் மூக்கை நுழைத்து,தங்கள் நிகழ்ச்சி நிரலை ஓரளவுக்கு
    முன்தள்ள முடியும்.வே.பிரபாகரன் “கரு கொண்டிருந்த அரசியலை” வரலாற்றில்
    எங்கேயாவது அழித்தாரா என்று ஐயர் விளக்க வேண்டும!.”புறச்சூழலை” விட்டு அனைவரும்
    வெளியேறவே விரும்பினர்.புலம்பெயர் சூழலின் “சமூகப் பிரச்சனையான” “ஈகோ” தான்
    அனைவரின் மூக்கு நுனியில் உள்ளது.”அரசியல் கருவில்” நிலை
    கொண்டிருந்தால்,பிரபாகரன் தொல்லை தாங்காமல் மக்கள் அவர்கள் பக்கம்
    சென்றிருப்பார்கள்!.மக்கள் படுகொலையை வைத்து வியாபாரம் நடந்திருக்காது.விஷயம்
    முற்றி விட்டது!,இன்னும் “பயிலா” பாடிக்கொண்டிருப்பவர்களுடன் சேர்ந்து
    ஆடமுடியாது.ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் வைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணியில்
    சிக்காமல்,உலகத்தமிழினத்தின் பகுதியினர் விலகுவது பரிசீலிக்கப்படுகிறது!.
    Reply
      பொடியன்
       Posted on 03/07/2010 at 11:47 am
      தமிழகத்தில் ஆட்டோக்களின் பின் பகுதியில் எழுத்துப் பிழையுடன் அறிவுரை
      வாசகங்கள் எழுதப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது. அதிகமாக ர, ற என்ற
      எழுத்துக்களை தவறான இடத்தில் பயன்படுத்துவார்கள். “சிறிக்கும் பெண்ணயும்
      சீரும் பாம்பையும் நம்பாதே” என்ற வசனம் சகல ஆட்டோக்களிலும் பார்க்கலாம். ..
      கருவாட்டிற்கும்,ஆற அமர விற்கும் ர, ற என்ற சொற்களை உரிய இடத்தில் பயன்
      படுத்தத் தெரியவில்லை. ஆங்கிலத்தை விடுங்கோ சரி போகட்டும் அன்னிய மொழி,
      தமிழையாவது ஒழுங்கா எழுதப்பழகுங்கோ.
      Reply
        JAMES FREDRIC
         Posted on 03/07/2010 at 4:15 pm
        இலங்கைத் தமிழருக்குதான் சரியான தமிழ் தெரியும் என்பது ஒரு பெரிய
        “ஜோக்”,அடுத்தது ஒரு மூடத்தனமான நம்பிக்கை!.இது அனைவருக்கும்
        தெரியுமாகையால்,நான் பதில் சொல்ல தேவையில்லை,தகக தளங்களில் “பொடியனுக்கு”
        பதில் கிடைக்கும் என்று நினைக்கிறேன்!.அறிவுக்கு நான்..அகந்தைக்கு…தருமி….
        கிடைக்கும் நேரத்தில்,திரும்ப கூட படித்து பார்க்காமல்,அப்படியே சிக்கலான
        மனவோட்டங்களை,டைப் செய்து அனுப்பப்படுகிறது. பிழையில்லாமல் எழுத
        முடியாது.விஷயம் விளங்கவில்லை என்றால் பிரசுரிக்க தேவையில்லை!.புரூப்
        திருத்தப்பட்ட புத்தகங்களில் பிழை கண்டுபியுங்கள்!.
        அடுத்தது திருவாளர் ஈழவனுக்கு,கிட்டதெட்ட என்னுடைய உணர்வுகளை பல தளங்களில்
        பதித்து விட்டதாக நினைக்கிறேன்.நான் சமுதாய கண்ணாடி அணிந்திருப்பதால்
        நீங்கள் கேள்வி கேட்க கூடியதாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.விஷயங்களை
        புரிந்துக் கொள்ள பெரியவர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்ல!.அரசியல்
        என்பது உயிரோட்டம் உள்ளது.பொருளாதாரத்தைப் போல உயிருக்கு சம்பந்தமில்லாத
        “கேசினோ” விளையாட்டு அல்ல.அரசியலை இருட்டுக்குள் இருந்துக் கொண்டு இணைய
        தளங்கள் மூலம் விளையாடுவது ஒரு “எஸ்ஃடஸி”.திரை மறைவு ஒப்பந்தங்கள் மூலம்
        தீர்வு காணமுடியும் என்றால்,ஏன் பிரேமதாஸா காலத்திலேயே முடியவில்லை!?.என்னை
        பொறுத்தவரை இலங்கைத் தமிழர் என்பது “கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாக”
        இருக்கிறார்கள்.”பிரேம் ஆஃப் ரெஃபரன்ஸ்” எதுவென்று
        தெரியவிலை!.சுப்பிரம்ணியம் சுவாமி முன்பு ஒன்று கூறினார்(உடனே சுவாமியை
        சி.ஐ.ஏ. ஏஜெண்ட் என வேண்டாம்),இந்திய இராணுவம் கொடுமை
        செய்த்தென்றால்,ஆதாரத்துடன் சர்வதேச நீதிமன்றத்துக்கு போக
        வேண்டியதுதானே,ஏன் ராஜீவ் காந்தியை கொன்றீர்கள் என்று கேட்டார்(பல
        புலன்பெயர்ந்த தமிழர்கள்? சட்டத்தரணிகள்).இந்தியா என்பது ராஜீவ்
        காந்தியோ,சுப்பிரமணியம் சுவாமியோ அல்ல!.கலைஞர் கருணாநிதியை
        விட,சுப்பிரமணியம் சுவாமிக்கு சில சமூக அக்கறை இருக்கிறது என்று நான்
        தனிப்பட்ட முறையில் நினைக்கிறேன்!.அதேபோல்தான் இந்த வன்னிப் படுகொலைகளும்
        .நடந்தது உண்மையென்றால்?!,இதனால் பாதிக்கப் பட்டது யார்?.நடந்த விஷயங்களைப்
        பாருங்கள்,எல்லாமே சொல்லி வைத்த மாதிரி அடித்தார்கள்.ஒரு போரில் அடுத்த
        நிகழ்ச்சிகளை இவ்வளவு துல்லியமாக எதிர்வு கூறமுடியாது!.இந்திய இராணுவத்தையே
        துரத்திய,ராஜீவ் காந்தியையே கொன்ற அதி புத்திசாலிகள்?,”மாவிலாறு அணையை”
        மடத்தனமாக ஏன் திறந்தார்கள்?.கேட்டால்,மட்டரகமான மட்டக்களப்பானான
        பால்ராஜ்தான் செய்தான் என்கிறார்கள்!.புறநாணூற்றில் மக்கள் பெருந்தொகையில்
        மடிந்ததால்,இரக்கப்பட்டு “தீர்வு வந்தது” அதுபோல் 21ஆம்நூற்றாண்டில் எறுமை
        மாட்டை வைத்து ஏரோப்பிளேன் ஓட்டலாம் என்பது,ஒரு “என்.ஜி.ஓ. விடம் காசு
        வாங்கிக் கொண்டு செயல்படும் புலன்பெயர்ந்த தமிழனின்? மூளையில் மட்டுமே
        உதிக்கும் குயுக்தி!.இதிலிருந்து பிரபாகரன் ஒரு நடைப் பிணமாக வெகு
        நாட்களுக்கு முன்பே ஆக்கப்பட்டு தமிழ்? ஏஜெண்டுகளால்
        பயன்படுத்தப்பட்டிருப்பது புரியவில்லையா?.நீங்களும் நானும்
        “காலச்சக்கரத்தை” தோல்வலிமையால் முட்டுக் கொடுத்து நிறுத்த
        முடியுமா?.இனியாவது “உலகத் தமிழ்” கோணத்தில் செல்லாமல்,இலங்கைப்
        பிரச்சனையை,இலங்கைப் பிரச்சனையாக முன்வைக்க முடியுமா?.இந்த தகவல் தொழில்
        நுட்ப உலகில்,”படுகொலைகளைப்பற்றி” சரியான தகவல்கள் வெளிவரவில்லையே ஏன்?.
        Reply
          meena
           Posted on 03/07/2010 at 5:43 pm
          what do you want to talk. subramaniam swamy participation of rajiv
          murder or indian peace keeping force raped and killed the thousands of
          tamil girls without witness. or latest indian sex scandal.ஈழவன்
           Posted on 03/07/2010 at 11:13 pm
          நீங்கள் எவ்வளவு தூரம் ஈழத்தமிழர்களை வெறுக்கிறீர்கள் என்பது தெரிகிறது.
          நன்றி. தமிழர் படுகொலையைப் பற்றி வந்த செய்திகளை நீங்கள்
          பார்க்கவில்லையோ. ஏன் ஈழத்தமிழருக்கு நல்ல தீர்வு வருவதால் உங்களுக்கு
          ஏதாவது பாதிப்பு உண்டா அன்பரே.JAMES FREDRIC
           Posted on 03/08/2010 at 4:57 am
          Hai Meena!,Lt Conl?.Kittu also said, Rajiv Gandhi was Murdered by
          “Makkal Kalai Illakiya kazhakam” in this web
          site(reffer:Maruthayan).Mr.Subramamaniyam Swamy was not brought up in
          Tamilnadu,he was brought up in NewDelhi.He knows about Delhi mentality
          more than Karunaanidhi’s family!.His father was president of “DELHI
          TAMIL SANGAM” before fifty years.In those days it was difficult to
          stay in Delhi as Tamil sangam because Tamil was identified with
          “HINDHI OPPOSITION” of Dravidian parties!.He had,not much sympathy on
          Tamilnadu.But he has social responsibilities unlike Karunanidhi’s
          family and expatriate Srilankan Tamils,who made “Trade gains” with
          Tamil issues!.thamilmaran
           Posted on 03/08/2010 at 2:44 pm
          can i just clarify what i think you are saying?you d like your
          subramaniya awamy to try the politics out of mr karunanithi.also i
          like to asked you if i ve understood this correctly. you want to
          change the tamil nadu politics because your subramaniya swamy is
          better?Soorya
           Posted on 03/09/2010 at 8:57 pm
          “இந்த தகவல் தொழில் நுட்ப உலகில்,”படுகொலைகளைப்பற்றி” சரியான தகவல்கள்
          வெளிவரவில்லையே ஏன்?.”
          யார் இந்தப் படுபாவி ஜெமிஸ் பண்டா பிடறேறிக்? படுகொலைகளை சந்தேகக்
          குறிக்குள் போட்டு படுகொலை செய்யப்பட்ட நாற்பது ஆயிரம் தமிழர்களை
          உயிர்ப்பித்து விட்டார்! இதுவரை எந்த அறிவாளியும் கேட்காத மிக சிக்கலான
          கேள்வி ஒன்றையும் அல்லவா கேட்டு எமது மண்டையை வெடிக்கவைத்து விட்டார்.
          இந்த தகவல் தொழில் நுட்ப உலகு சகலதும் அறிந்திருந்தும் ஒன்றுமே
          தெரியாதுபோல் நாடகமாடியதும் இந்த எழுத்து வீரனுக்குத் தெரியாதா? எழுதத்
          தெரியுமென்றால் எதையும் எழுதிக் கிழிக்க வேண்டாம்.Santiago Bernabeu
           Posted on 03/14/2010 at 6:57 am
          நண்பரே புலன் பெயர்ந்த தமிழர்கள் இருப்பது பணம் வாங்கி ஓட்டு போடும்
          நாட்டில்,நாங்கள் புலம் பெய்ர்ந்த தமிழர்கள். ஈழப்பிரச்சனை பற்றி
          எழுதுவதற்கு உமக்கு எமது அரசியல் பற்றிய புரிதலும், ஈழம் பற்றியும் நீர்
          அறிந்திருக்க வேண்டும் நுனிப் புல் மேய்ந்து விட்டு எங்கள் போராட்டம்
          பற்றியும் அதன்பால் பலியானவர்கள் மீதும் களங்கம் ஏற்படுத்தக் கூடாது.
          எங்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை விட உங்கள் நாட்டில் 1000
          பிரச்சினைகள் முதலில் அதை கவனியும். அதற்கு முன் உமது உதவிக்கு no
          thanks.Prince
           Posted on 03/18/2010 at 1:28 am
          நண்பரே புலன் பெயர்ந்த தமிழர்கள் இருப்பது பணம் வாங்கி ஓட்டு போடும்
          நாட்டில்,நாங்கள் புலம் பெய்ர்ந்த தமிழர்கள். ஈழப்பிரச்சனை பற்றி
          எழுதுவதற்கு உமக்கு எமது அரசியல் பற்றிய புரிதலும், ஈழம் பற்றியும் நீர்
          அறிந்திருக்க வேண்டும் நுனிப் புல் மேய்ந்து விட்டு எங்கள் போராட்டம்
          பற்றியும் அதன்பால் பலியானவர்கள் மீதும் களங்கம் ஏற்படுத்தக் கூடாது.
          எங்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை விட உங்கள் நாட்டில் 1000
          பிரச்சினைகள் முதலில் அதை கவனியும். அதற்கு முன் உமது உதவிக்கு no
          thanks. ithellam umathu kannukku theriyavillyo mr james.xxx
         Posted on 03/08/2010 at 5:15 pm
        JAMES FREDRIC
        03/08/2010 James Fredric said”
        “Mr.Subramamaniyam Swamy … has social responsibilities unlike
        Karunanidhi’s family and expatriate Srilankan Tamils,who made “Trade
        gains” with Tamil issues!.”
        He must be joking. The man was a RAW middleman for the LTTE and turned
        hostile when his credibility was destroyed after the killing of Rajeev
G.
        S Swamy has been the biggest opportunist in Tamilnadu electoral
        politics, If he stole less than Karunanidhi that was because ha had no
        access to the kitty.
        Today he is taking up the cause of the caste-ridden Dikshithars of
        Chithamparam against the Tamil public.
        Subramamaniyam Swamy is a venomous and vindictive character and a
        political nonentity. He is boosted by the Hindutva lobby and his foreign
        handlers.
        Reply
          Arun
           Posted on 03/09/2010 at 7:11 am
          நண்பர் XXX ! சுப்பிரமணியசாமியை முன்னிலைப்படுத்துவதிலிருந்து இவர்களுடய
          அடையாளம் தெரியவிலயா? எந்தப்புத்துக்குள்……………… இவர்களுடைய போதனைகளால்
          தானே போராட்டம் நசுக்கப்பட்டது.இயக்கங்களுக்கிடையில் பிளவு, உள்
          பூசல்கள்,தமிழ் எம்.பிக்கள் படுகொலை என யாரின் சதியில்
          நடந்தேறின???????JAMES FREDRIC
           Posted on 03/09/2010 at 8:47 am
          There is a huge COMMOTION now,because of Karunanidhi’s(Dravidian?) and
          expatriate srilankan tamil’s handlings of problem.India’s HOME RULE
          was good but we lost some Indian identity in that.That beame a big
          monster for present problem(because of dravidian
          politics?).Ayothidasan was converted to BUDDHISM(theravada)!,A.Marx is
          of presidency college,Chennai is in Columboo!.It is a cynide capsule
          leading to racial discrimination of Tamils!.Even China and Japan in
          Asia may accept because of /When discussing “sterility between two
          human races” as observed by Darwin, Blavatsky notes:
          “Of such semi-animal creatures, the sole remnants known to Ethnology
          were the Tasmanians, a portion of the Australians and a mountain tribe
          in China, the men and women of which are entirely covered with hair.
          They were the last descendants in a direct line of the semi-animal
          latter-day Lemurians referred to. There are, however, considerable
          numbers of the mixed Lemuro-Atlantean peoples produced by various
          crossings with such semi-human stocks — e.g., the wild men of Borneo,
          the Veddhas of Ceylon, classed by Prof. Flower among Aryans (!), most
          of the remaining Australians, Bushmen, Negritos, Andaman Islanders,
          etc” (The Secret Doctrine, Vol. 2, pp 195-6). According to Blavatsky,
          “The MONADS of the lowest specimens of humanity (the “narrow-brained”
          savage South-Sea Islander, the African, the Australian) had no Karma
          to work out when first born as men, as their more favoured brethren in
          intelligence had” (The Secret Doctrine, Vol. 2, p 168)./,this!.It is
          not Indian identity.WE MUST ALLOW PEOPLES LIKE SUBRAMANIUM SWAMY TO
          SPEAK FOR INDIAN IDENTITY!,otherwise they can beome “DRAVIDIAN MADE
          ARYANS”!JAMES FEREDRIC
           Posted on 03/18/2010 at 9:22 am
          /நண்பரே புலன் பெயர்ந்த தமிழர்கள் இருப்பது பணம் வாங்கி ஓட்டு போடும்
          நாட்டில்,நாங்கள் சோத்துக்காக வந்த அகதி புலம் பெய்ர்ந்த தமிழர்கள்.
          ஈழப்பிரச்சனை பற்றி எழுதுவதற்கு உமக்கு எமது அரசியல் பற்றிய
          புரிதலும்,…./–பிரின்ஸ்?
          அதே போல் நீங்கள் இந்தியாவிற்குள் கால் வைக்கும் போதும் ” “NO
          THANKS”.நீங்கள் ஐரோப்பிய,கனடா நாடுகளில்,அங்கேயே வாழும் தனி
          மனிதர்களிடம்,சில “சீட்டுப் பிடித்தல்,புல்லடி வேலைகளை” காண்பித்தால்
          அவர்களுக்கு புரியாது!.ஆனால் இலங்கையிலுள்ள இலங்கைத்
          தமிழருக்கும்,சிங்களவர்களுக்கும் அது புரியும்.அதே நிலை வரவேண்டுமா?”NO
          THANKS”!.Santiago Bernabeu
           Posted on 03/23/2010 at 1:39 am
          நண்பரே நாங்கள் செய்தால் சீட்டு நீங்கள் செய்தால் Sheet fund
          இரண்டுக்கும் ஒரு வித்தியாசம் தான் எங்களுக்கு போட்டவை திரும்ப
          கிடைக்கும்.நண்பரே உமது சக தமிழனை இந்தியாவுக்குள் வர வேண்டாம் என்று
          சொல்லிய வீரம் உமது முப்பாட்டனுக்கு இருந்திருக்குமேயானால் உமது பெயர்
          என்னவாக இருந்திருக்கும் ? குப்பனா சுப்பனா ? Enjoy nowஈழவன்
       Posted on 03/07/2010 at 12:51 pm
      இங்கு நாம் இந்திய தமிழராக இருக்கலாம் அல்லது ஈழத்தமிழராகவோ அல்லது புலம்
      பெயர்ந்த தமிழராகவோ இருக்கலாம். ஆனால் தமிழினம் காப்பாற்றப்பட வேண்டும்.
      ஏனெனில் அது ஆபத்தில் உள்ளது. சில விடயங்களை தெளிவாக எழுதுவது நல்லது. எல்லா
      மக்களுக்கும் புரியவேண்டும். எனது கருத்து இதுதான், எமது இனத்திற்கு தீங்கு
      செய்தவர்கள் எமக்கு மட்டும் செய்யவில்லை. தமக்கும் சேர்த்து தான்
      செய்துள்ளார்கள். இன்று வெற்றி பெற்றது போன்ற நிலையில் இருப்பவர்கள் நாளை
      எமது நிலைக்கு உள்ளாகலாம். காலம் தான் பதில் சொல்லும். மனித வரலாற்றில்
      அநீதியினால் பக்கங்கள் நிறைந்துள்ளன. ஆனாலும் தமிழருக்கு நீதி நிலை
      நாட்டப்படும் என்று சாதாரண தமிழனாக நான் நம்புகிறேன். ஏனெனில் எமது
      இனத்திற்கு நிகழ்த்தப்பட்ட குற்றம் வெட்ட வெளிச்சத்தில் பட்டப்பகலில்
      நிகழ்ந்த குற்றம். குற்றம் செய்தவர்கள் யார் என்று தெரிந்த குற்றம்.
      சாட்சியங்களுடன் செய்த குற்றம். அகம்பாவத்தால் செய்த குற்றம். செய்தவர்களைத்
      தேடி வரும். நாம் சிறியவர்கள் தவறு செய்தோம் சரி, பெரியவர்கள் ஐயா நீங்கள்
      பெருந்தவறு செய்து விட்டீர்களே.
      Reply
        thurai
         Posted on 03/08/2010 at 10:47 am
        தமிழனிற்குள் இருந்து கொண்டே தமிழனை அழிக்கும்
        தீய சக்திகளை ஒவ்வொரு தமிழனும் தானாக உணர்ந்து கொள்ளும்
        வரை தமிழன் தன்னைத் தாதே அழித்துக் கொள்வான், துரை
        Reply பரமா
   Posted on 03/07/2010 at 2:29 am
  தமிழினம் இனம் சார்ந்த சமூகக் கட்டமைப்பு சமூக உறவு தனிமனித ஆழுமை முதற்கொண்டு
  அனைத்துமே ஜனநாயகத்துக்கு விரோதமானது. ஒரு இனமாகவே வரையறுக்கமுடியாத ஒரு மக்கள்
  கூட்டமாகவே இருந்துவருகின்றது. ஒருவரை ஒருவர் ஒருவர்கருத்தை ஒருவர் சாதிய
  அடிப்படையில் மத வர்க்க பிரதேச அடிப்படையில் போட்டிநிலைப் புத்திஜீவித மமதை
  அடிப்படையில் வரலாறு முழுக்கவும் ஏற்க மறுக்கும் ஒரு மக்கள் கூட்டம் இது.
  அடிமைக்குணத்தை மிதமிஞ்சிய அளவில் கொண்டிருக்கும் மக்கள் கூட்டமாக இருந்து
  வருகின்றது. தனது அந்தஸ்த்தை முன்னேற்றத்தை கொளரவத்தை உயர்த்துவதற்காக சதி மத
  வர்க்க புத்திஜீவித பிரதேசவாத அடிப்படையில் தன்னித்தையே பலியாக்க பழகிய இனம்.
  தன்னின இரைதேடிகள். இந்த மக்கள் கூட்டத்துள் ஒருவரை ஒருவர் இனமாக ஆத்மார்த்தமாக
  நேசிக்க முடியாது. மாறாக சாதியாகவோ மதமாகவே என்னும் பல இனத்தை சீர்குலைக்கும்
  காரணிகளை அடிப்படையாகக் கொண்டே சமூக உறவு ஏற்பட முடியும். இவ்வாறான ஒரு மக்கள்
  கூட்டத்தில் இருந்து மக்களுக்கு தலைவனாக ஒருவன் வரவேண்டும் என்றால் அவன் எவ்வாறு
  வருவான்?
  சாக்கடைக்குள் இருந்து தூய்மையாக எழுதல் வேண்டும் என்று சாக்கடைக்குள்
  இருந்துகொண்டு உத்தரவிடுவது எவ்வளவு அபத்தம் ?
  சாதிய மோதல்கள் பிரதேசவாத முரண்பாடுகள் மத மோதல்கள் இயக்க மோதல்கள் ஒரு
  கருத்தின் கீழ் கொள்கையின் கீழ் ஒன்றுபட முடியாத புத்திஜீவித மோதல்கள் இயக்க
  மோதல்கள் அனைத்துக்குமான அடிப்படையும் அது சார்ந்த தனிமனித சமூக குணமும் வரலாறு
  நீளவும் இருக்கின்றது. பானையில் உள்ளதே அகப்பயில் வரும். இந்தச் சாக்கடை இனத்தில்
  இருந்தே அனைத்தும் உருவாகின்றது. அனைத்தும் மாற்றமடைகின்றது. அனைத்தும்
  தோன்றுகின்றது.
  நீண்ட காலமாக வாய்வார்த்தையால் பேசிப்பேசியே வந்த வரலாற்றின் எதிர்வினையாக
  பிரபாகரனை பேச்சில்லாத செயலாகக் காணலாம் மறுபடி செயலை பின்தள்ளிய பேசிக்
  களிக்கும் வரலாறு தொடரலாம்.
  இந்தச் சாக்கடை இனத்தை சிங்களவன் அழித்தது பெரும்பான்மையாக இருப்பினும்
  பிரபாகரனின் தண்டனைக்கு உட்பட்டவர்களே அதிகம் எனவே கருதப்படும் ஏனெனில் இது
  தன்னித்துக்குள் இரைதேடும் இனம். சிங்களத்துக்கு இரையாகியது முக்கியத்துவம்
ஆகாது.
  பிரபாகரன் விதித்த ஒழுக்கக் கட்டுப்பாடுகள் கட்டுக்கோப்புகளை இராணுவ பின்னணியில்
  இனம்காண்பது ஒரு விதம் ஆனால் இந்தக் கட்டுப்பாடுகளே சமூகத்தின் புனிதமாக
  வரையறுக்கப்பட்டுவந்த வரலாற்றில் சமூகப் பின்னணியை இனம்காண்பது நேர்மையானது.
  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கருத்து இருக்கின்றது. அதை
  வெளிப்படுத்துவதற்கான சுதந்திரம் இருக்கின்றது. என்னளவில் பிரபாகரன் இந்த சாக்கடை
  மக்கள் கூட்டத்தின் நிர்ப்பந்தத் தெரிவு. இந்த மக்கள் கூட்டத்தில் இருந்து
  வந்தவர். சாக்கடைகளுக்கு எதிரமறையான புனிதம் சார்ந்த நிர்ப்பந்தம் இங்கே
  முயலப்பட்டு தோற்கடிக்கப்படுகின்றது. சுயமான பாதையையும் அதற்கு எதிரமறையான
  மாற்றங்களையும் சந்தித்தவண்ணம் வரலாறு தனது பயணத்தை தொடர்கின்றது.
  எந்த இயக்கமானாலும் சரி எந்த சாதி மதத்தை சேர்ந்தவரானலும் சரி எந்தக் கொள்கையை
  சார்ந்தவரானாலும் சரி எவ்வாறு முரண்பட்டாலும் சரி எட்டப்பன் துரோகி மாவீரன்
  கிழக்கன் வடக்கன் தீவான் காட்டான் இடதுசாரி வலதுசாரி எவன் எவ்வாறு எப்படி
  இருப்பினும் எவ்வாறு மோதிக்கொண்டாலும் எல்லாவற்றுக்குமான அடித்தளம் எம்மிடம்
  இருக்கின்றது. எந்த ஒரு இசத்தாலும் எந்த ஒரு புறநிலை அழுத்தம் நெருக்கடி
  ஒடுக்குமுறையாலும் இந்தச் சாக்கடை மக்கள் கூட்டம் இனமாக வலிமைபெறவோ எழுந்து
  சுயமாக நிற்கவோ முடியாது.
  மதத்தை போதியுங்கள் அவை விட்ட தவற்றை எழுதுங்கள் போராட்டத்தை அவைவிட்ட தவற்றை
  எழுதுங்கள் இந்தக்காலத்தவன் விட்ட தவறை வருங்காலத்தவன் எழுதுவான் ஆனால் தவறுகள்
  திருத்தப்பட மாட்டாது. என்னும் சில தலைமுறைகள் வரை எழுதிக்கொண்டே இருக்கலாம்.
  இந்தச் சாக்கடை மக்கள் கூட்டத்திற்காக போராடி மடிந்தவர்கள் புலியாக இருந்தாலும்
  சரி எந்த இயக்கத்தில் இருந்தவரானாலும் சரி எந்தக் கொள்கையின் கீழ்
  உழைத்தவரானாலும் சரி நீங்கள் உயர்ந்தவர் புனிதமானவர் ஆனல் உங்களுக்கு மரியாதை
  செய்யும் தகுதியை இழந்தவனாக இருக்கின்றேன் இன்நிலையில் விமர்சிக்க எந்தத்
  தகுதியும் என்னிடம் இல்லை. எனக்கென்று உண்மையில் பிரத்தியோக அடயாளம் என்று
  எதுவும் இல்லை. அதில் எனக்கு பற்றும் இல்லை. சாக்கடைக்குள் இருந்து பறந்து வந்து
  கடித்து புதிய காய்ச்சல்களை பரப்புவதில் எனக்கு உடன்பாடும் இல்லை.
  Reply மகுடியார்
   Posted on 03/07/2010 at 8:48 am
  அன்புள்ள தோடடா! நீங்கள் ஆத்திரப்படாதையுங்கோ தலைவர் வெளிப்பட்டு மாவீரர் உரை
  வாசிக்கேக்கை உவையெல்லாம் திரும்பவும் வாயைப் பொத்திக் கொண்டிருக்கத்தான்
  போயினம். நரேன் பாவம் 30 வருடங்களாக வெளியே சொல்ல முடியாமல்
  அடக்கிவைத்திருந்தவைகளை கொட்டித்தள்ளுகிறார். மனதிற்குள்
  அடக்கிவைத்திருக்கிறவற்றை வெளியே கொட்டினால் மனப்பாரம் குறையும்
  என்பார்கள்.பாவம் கொட்டித்தள்ளட்டும்.
  Reply
    shan naran Norway
     Posted on 03/07/2010 at 11:21 am
    உண்மை சற்று தடுமாறுகிறது போல் தெரிகிறது ஐயா
    பிரபா சார்ந்த உண்கள் குழுக்கும் உமா சார்ந்த குழுவுக்கும்
    இடையில் புதிய புலியின் தலைவர் செட்டி அவர்களின்
    செயல்பாட்டையும் அவரின் கெலையையும் ஏன் எழுதவில்லை
    தெரியாதா? அல்லது மறைகின்றிகழா?
    நரேன்
    Reply
      sivam
       Posted on 03/13/2010 at 9:07 pm
      Setdi killed by TELO central committe not by LTTE anyway aiyar can even
      guess who am I ? I have seen you when your are with jeyval at urrani but
      you have not seen me. killinochi… killinochi the youngest gun man?
      Reply thurai
     Posted on 03/07/2010 at 11:52 am
    தலைவரின் மாவீரர் உரையின் பெறுமதி தெரியுமா? அத்னைக்காட்டியே
    உலகில் அப்பாவித்
    தமிழரிடம் சுருட்டி வாழ்ந்த்வர்களிற்கே சுருட்டிய தொகையும் எங்கே பேனதென்றும்
    தெரியாது.
    தமிழ்? ஈழ்ம்? விடுதலையா? எல்லாம் புலிக்ளிற்கு வாய்ப்பேச்சும்
    பொய்ப்பேச்சும்தான்.
    இப்போ உலகத் தமிழர் பேரவையாம். புலத்தில் தேர்தல் நடத்தியவர்களே பொலிசாரால்
    சட்டமீறி பண்ம்பறித்தலிற்காக் கைது செயப்படுகின்றனர். இவர்களை மீட்பிப்பதற்கு
    உலகத் தமிழர் பேரவை பண்ம் கொடுக்குமா? அல்லது தமிழரிடம் திரும்பவும் பண்ம்
    கேட்குமா?
    துரை
    Reply Garammasala
     Posted on 03/08/2010 at 2:09 am
    “அன்புள்ள தோட்டா! நீங்கள் ஆத்திரப்படாதையுங்கோ தலைவர் வெளிப்பட்டு மாவீரர்
    உரை வாசிக்கேக்கை உவையெல்லாம் திரும்பவும் வாயைப் பொத்திக் கொண்டிருக்கத்தான்
    போயினம்.”
    மகுடியாரே!
    “எப்போ வருவாரோ?”
    ஏன் இப்படி எல்லாரையும் பேய்க்காட்டப் பார்க்கிறீர்கள்?
    Reply Sundhar
   Posted on 03/07/2010 at 5:43 pm
  பரமா : முற்பகுதி சிந்திக்க வைக்கக் கூடியவையாகவும் சிந்ததிக்க வேண்டிய
  விடயங்களாகவும் இருக்கின்றன. எமது சமூக அமைப்பின் விளைபொருள் எவ்வாறு இருக்கும்
  என்பதை சுட்டிக் காட்டுகின்றீர்கள். அருமை.
  பிற்பகுதியில் விமர்சிக்க அருகதையற்றவர்களாக இருக்கின்றோம் என்பதை ஏற்றுக்
  கொள்ள முடியவில்லை. குற்றவுண்ர்ச்சி எத்தப் பிரச்சனைக்கும் தீர்வாகாது. வரலாறு
  முன்னோக்கிச் செல்கையில் நாமும் சக பயணிகள் தான். எம்மை சீர்தூக்கிப்பார்ப்பதன்
  மூலமே அடுத்த கட்டத்திற்கு செல்லமுடியும்.
  Reply
    shan nalliah,gandhiyist norway
     Posted on 03/14/2010 at 10:45 am
    Well Said! We need people like you to guide our people!Please continue your
    comments!
    Reply கடவுள்
   Posted on 03/07/2010 at 8:28 pm
  பாதுகாப்பு பேரவை என்ற இயக்கத்தினரால் மட்டக்களப்பில் 1984 இல் ஒரு காவல் நிலையம்
  தாக்கி அழிக்கப்பட்டது என்பது மட்டுமே ஐயரின் பதிவில் கிழக்கு மாகாண செய்தியாக
  உள்ளது பொலிஸ்நிலைய தாக்குதலைவிட பாதுகாப்பு பேரவையால் களுவாஞ்சிக்குடி பொலிஸ்
  நிலைய பொலிசாரின் ஜீப
  தந்திரோபாயமான முறையில் தமது பொறிக்குள் வரவழைத்து கண்ணிவெடித் தாக்குதல் இடம்
  பெற்றது. இதில் 8 பொலி- உத்தியோகஸ்தர்கள் கொல்லப்பட்டனர். ஆயுதங்களும்
  கைப்பற்றப்பட்டது. வெல்லாவெளி பொலிஸ்நிலைய பொலிஸ்சாரின்ரி ஜீப
  வண்டி மீதும் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தப்பட்டது புலிகளின் பிளவுபட்டிருந்த
  வேளை (1980) அவர்களிடமிருந்து பிரிந்த சில போராளிகளினாலே இத்தாக்குதல்கள்
  நடைபெற்றது. இதே காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் களுவாஞ்சிக்குடி பொலிஸ்நிலைய
  தாக்குதல் ஏறாவுர் பொலி— நிலைய தாக்குதல் காயான்கேணியில் வைத்து வாகரை இராணுவ
  –வண்டிகமீது கண்ணிவெடித் தாக்குதல் தம்பிலுவில் தம்பட்டையில் வைத்து விசேட
  அதிரடிப்படையினரின் ரோந்து படையினர் மீது தாக்குதல் நடைபெற்றது. இதே போன்று
  நிர்மலா நித்தியானந்தனை சிறையுடைப்பு செய்து அதிலிருந்து மீட்டனர். இவையாவும்
  1984—1985 வரை நடைபெற்றவை. இதேபோல் ஈரோஸ் இயக்கத்தினரால் செங்கலடி
  கொடுவாமடுவில் வைத்து விசேட அதிரடிப்படையினரின் ரோந்து அணி மீது பொரியதொரு
  தாக்துதல் நடைபெற்றது. இதில் பெருமளவு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. கிரான்
  புலிபாய்ந்தகல் வளைவில் வைத்து விசேட அதிரடிப்படையினர் மீது கண்ணிவெடித்
  தாக்குதல் நடைபெற்றது.
  இக்காலப் பகுதியில் லெபனாண் இந்தியா நாடுகளில் பயிற்சி பெற்ற் Pழுடுவுஇ
  நுPசுடுகுஇ வுநுடுழுஇ அங்கிருந்தும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
  மக்களிடமிருந்து சாப்பாடுபார்சல்களை சேகரித்து சாப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.
  1983 ஆம் ஆண்டு மட்டக்களப்பு பாரிய சிறையுடைப்பை தாங்கள்தான் செய்ததென்று
  நுPசுடுகுஇ Pடுழுவு இயக்கங்கள் உரிமைகோரிக்கொண்டு இருந்தனர்.
  இச்சிறையுடைப்புக்கு பனாங்கொடை மகே—வரனின் முயற்சியால் நடைபெற்றது என்பது உண்மை.
  இவரால் மட்டக்களப்பில் சில இளைஞர்களை இணைத்து 1983 டிசம்பர் காத்தான்குடி மக்கள்
  வங்கு கொள்ளையடிக்கப்பட்டது. சகோரப் படுகொலை எதிலும் ஈடுபடவில்லையென நாம்
  நினைத்துக் கொண்டிருக்கும் நுசுழுளு இயக்கம் நெப்போலியனை கொலை செய்தார்கள்
  என்று ஐயரின் பதிவில் இருக்கிறது. யாராவது இந்த உண்மையை தெரிந்தவர்கள்
  உறுதிப்படுத்தமுடியு
  Reply ரூபன்
   Posted on 03/07/2010 at 10:41 pm
  ஐயாவின் வரலாற்றை தொடர்சியாக வாசித்து வரும் வாசகனில் ஒருவனும் கூட….
  ஐயாவின் வாய்மொழி வரலாற்றைக் கேட்டவனும், தற்பொழுது பதிவேற்ற வரலாற்றை
  வாசிக்கும் வாசகனாக எனக்குள், எஞ்சி இருப்போருக்கு ஐயா மகுடம் சூடுகிறாரா என்ற
  பிரமிப்புத்தான் எனக்குள் எழுகிறது.
  புதிய புலிகளின் வரலாற்றை ஐயா விழுங்கி விட்டாரா? என்று கூட நான் யோசித்ததுண்டு.
  தமிழரசுக் கட்சி மற்றும் கூட்டணிக்காக வக்காளத்து வாங்கிய தமிழ்ப் பத்திரிகை
  உலகத்தில் கூட இது பற்றி நிரம்பச் செய்திகள் பதிவாகியுள்ளன,
  (கீரோத்தனமாகத்தான்!).
  வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்குப் பிறகு, ‘தமிழீழ விடுதலைப் புலிகள்’ உருவானதாக
  ஐயாவின் பதிவு கூறுகிறது. பிரபாகரன் உயிரோடு இருந்த காலத்தில்…
  அவரின் இயக்க வரலாறு, வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு 09 நாட்களுக்கு முன்
  உருவானதாக புலிகள் அதிகாரபூர்வமாக எழுதிவந்தனர்….
  உரும்பிராய் நடராஜா கொலைக்குப் (1976 08 02)பின்னர், அக்கொலையில் தேடப்பட்டதாக
  பாலா இருந்ததால்…
  ”பாலா, பேபி சுப்பிரமணியம், தங்கா ஆகிய மூவரும் எம்மைப்பற்றி அறிந்து எம்மோடு
  தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்கின்றனர். இந்தத் தொடர்புகளூடான உரையாடல்களின்
  பின்னர் அவர்களும் எம்மோடு இணைந்து இயங்க ஆரம்பிக்கின்றனர். இதே வேளையில்
  லண்டனிலிருந்து இலங்கை வந்திருந்த விச்சேஸ்வரன் என்ற விச்சு என்பவரும் எம்மோடு
  தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்கிறார்.”
  மேலும்….
  ” இரண்டு பேராகச் சுருங்கிப் போன மத்திய குழு தவிர, பண்ணையில்ருந்த உறுப்பினர்கள்
  முழு நேரமாக பண்ணையில் விவசாயம் செய்து கொண்டிருக்கிறார்கள். இவ்வேளையில் புதிய
  மத்திய குழு ஒன்றைத் தெரிவு செய்யும் முடிபிற்கு வருகிறோம்.
  அந்த மத்திய குழுவில், பேபி சுப்பிரமணியம், நாகராஜா, கணேஸ் வாத்தி, தங்கா,
  விச்சு, நான், பிரபாகரன், , குலம், பின்னதாக இந்தியாவிலிருந்து வந்து திரும்பி
  வந்த பற்குணம் ஆகியோர் அங்கம் வகிக்கிறோம். இந்த மத்திய குழுவில் தான் புதிய
  புலிகள்(TNT) என்ற அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகள்(LTTE) என்று ” உத்தியோக
  பூர்வமாக” பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. 1976 இறுதிப்பகுதிதமிழீழ விடுதலைப்
  புலிகளின் ஆரம்பமாகவும் அமைகிறது. இந்த மத்திய குழுத் தெரிவுக் கூட்டம் வவுனியா
  பூந்தோட்டம் பண்ணையில் தான் நடைபெறுகிறது. இங்கு கூடியிருக்கும் ஒவ்வொருவரும்
  ஒவ்வொரு பெயரை முன்மொழிகிறோம். நானும் கூடத் தான். எமது இயக்கத்தின் புதிய
  பெயரைத் தெரிவு செய்வதில் அனைத்து உறுப்பினர்களும் ஆர்வம் கொண்டு விவாதிக்கிறோம்.
  வெவ்வேறு பெயர்கள் சொல்லப்பட்டு இறுதியாக பல்வேறு தெரிவுகளின் கூட்டாக “தமிழ் ஈழ
  விடுதலைப் புலிகள்” என்ற பெயர் உருவாகிறது. ”
  ஆக வட்டுக்கோட்டைக்குப் பிறகுதான் ‘விடுதலை’ அமைப்புகள் தொடங்கின… பிறகு
  என்னத்துக்கு விண்ணாங்கள்! கூட்டணிக்கு விரல் சொடுக்கிய ‘விடுதலை’ அமைப்புக்கள்
  இன்று பூராயக்கதை பேசுகின்றன……
  அன்று தமிழரசுக்கட்சிக்கு எதிராக வீதிகளிலும், பனை வடலிகளுக்குள்ளும் இரத்தம்
  சிந்தியவர்கள் (சாதிரீதியாக) போராளிகள் இல்லையா? ….. (வர்க்கரீதியாகவும்தான்!)
  அரசை எதிர்ப்பவன் போராளி! உள்ஊர் ஆதிக்க சக்தியை எதிர்த்தவன் ஏமாளியா?…
  யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகமே வரக்கூடாது என்று ஒற்றைக்காலில் நின்ற அன்றைய
  விடுதலை அமைப்புகள்… அதே பல்கலைக்கழக மாணவிகள் இராணுவத்தால் பாலியல் மாணபங்கம்
  நிகழ்ந்ததாக கூறித்தான், திருநெல்வேலி குண்டுத்தாக்குதலில் 12 படைவீரர் (13 ன்று
  அல்ல: ‘திறிலுக்காக’ வந்தவர்கள் எல்லோரும் குளோஸ் என்று செய்தி வெளியிட்டனர்)
  கொல்லப்பட்டு இனக்கலவரமும் நடந்தேறியது….
  தமிழ் செய்சித்தாள்களை காறித் துப்பவேனும்!–
  இப்படித்தான் 1974 தமிழாராட்சி மாநாடு நடந்தபோது, 09 பேர் மாண்டதாக
  நினைவுக்கல்லும் எழுப்பி உசுப்பிவிட்டது.
  ஆனால் 2001ம் ஆண்டுக்குப் பின்னால்தான், உண்மைக்கு நினைவுக்கல் எழுப்பப்பட்டது!
  ஆம், அன்று 11பேர் கொல்லப்பட்டனர். இதில் இருவர் கூட்டணியின் ஊர்வலத்தில்
  ஏற்பட்ட மின் ஒழுக்கில் இறந்திருந்தனர். இதில் என்ன அசிங்கம் என்றால் அந்த
  இருவரின் உடலைத்தான் அரசின் அட்டகாசத்தில் இறந்ததாகக் காட்சிப்படமாக வைத்தனர்!
  அன்று படப்பிடிப்பாளர் கைலைநாதனால் எடுக்கப்பட்ட அணைத்துப் படங்களும், அரச
  உளவுப்பொலீசாரால் விசாரணைக்காகப் பறிக்கப்பட்டிருந்தது என்பதே உண்மையான வரலாறு….
  கண்ணால் காண்பதும் பொய்!
  காதால் கேட்பதும் பொய்!!
  தீர விசாரித்து, பகுத்தறிவதே மெய்யும் உண்மையான வரலாறுமாகும்…..
  பின்னிணைப்பு :
  International Tamil Conference (1974) Remembered
  (10 January 1974)
  It is twenty-seven years today since the 4th International Conference Seminar
  of Tamil Studies took place in Jaffna, on 10 Jan 1974.
  The whole of Jaffna peninsula was in a festival mood throughout the period
  during the conference. All roads and lanes were decorated with Banana plants,
  coconut trees, Casuarina branches etc. Pandals were erected on the roads, and
  the traditional Thoranams were hung along the roads for miles and miles.
  People behaved as if a wedding was taking place in their own homes. I would
  call it a period of Tamil awakening.
  The seminar was conducted mainly in the Veerasingam Hall and Tamil scholars
  from all over the world were presenting papers at the conference that lasted
  almost ten days. On the last day a public meeting was arranged by the
  organisers to enable the public to listen to the speeches by the scholars.
  A massive stage was erected in front of the Veerasingam Hall and over fifty
  thousand people congregated on the Jaffna Esplanade. It was a great experience
  to listen to the speeches by the scholars, as their utterances were very
  informative. For example we felt proud to hear that Tamil is one the three
  oldest languages of the world we live in. Every Tamil who listened to the
  lectures felt utterly proud to be born a Tamil.
  While Professor Naina Mohamed from India was delivering his lecture tragedy
  struck.
  Several vans and jeeps filled with armed policemen drove in and started
  shooting at random and hitting people with their batons and riffle butts.
  People began to run aimlessly. There was a stampede.
  I saw the policemen chasing innocent people, and trampling over those fallen
  on the ground. I put my youngest son on the ground and tried to safeguard him
  by crouching over him. At that time one policeman hit me on my left elbow that
  hurt me for months thereafter.
  I have five children out of them two of our sons went missing in the crowd.
  There were some youngsters trying to lower down girls and ladies into a ditch
  surrounding the Jaffna Fort to safeguard them from police attack. And another
  set of our boys, were helping these girls and ladies to climb out of the ditch
  near the Muniyappar Temple. I told my wife and my two daughters that I would
  pick them near the Temple and crawled along with my youngest son to my car.
  I put my son in first and crept into the car – an old Ford Anglia – and
  started driving on the esplanade towards the temple. I felt sorry that I had
  to drive over abandoned bicycles. My eldest son (12) who was hiding under a
  truck saw my car and ran behind it and caught up at the temple. It was a big
  relief to see him alive. But we were terrified to hear that our other son, who
  was only 10, had gone missing. We loaded the car with four more girls known to
  us, and drove home after dropping the girls at their respective residences.
  When we arrived home we were overjoyed to see our second son had already found
  his way home.
  While at the esplanade I saw the police shoot at the electric wires that fell
  on the crowd and nine innocent lives were lost on that night. This included a
  good friend of mine Mr. J.F. Sigmaringham (St. John’s College), a great
  teacher, social worker and an outstanding co-operator. Earlier on the same day
  two more civilians died of electrocution during a procession on the Hospital
  Road. These two deaths were attributed to the non co-operation on the part of
  the then mayor of Jaffna, who was a stooge of the government – a Quisling.
  All together eleven lives were sacrificed on that day.
  I would consider that day the 10th of January 1974 was the day when the Tamil
  Eelam struggle became the struggle of the Tamil people. Even though the name
  ‘Tigers’ was not known at that time, I saw a few youngsters standing up to the
  policemen, and fighting them by throwing aerated water bottles and stones. I
  can still visualise those bottles crashing the windscreens of the police
  jeeps. It was touching and encouraging to note elderly men collecting empty
  bottles and stones and handing them over to the youngsters who were attacking
  the police. I take it that it was the birth of the Ellai Padai and
  Uthavuppadai of today.
  A struggle that started with empty bottles has grown to the extent of using
  152mm calibre artilleries, T56 riffles, Basukas, RPG launchers, Multi Barrel
  Rocket Launchers (MBRL) etc., etc.
  The few hand full of youngsters of the 10th of January 1974 are now
  transformed into a conventional army facing the might of the 125,000 strong
  Sinhala army.
  Let us resolve that we extend our support unreservedly to establish peace,
  safety, security and dignity to our people back in Tamil Eelam.
  I request all readers of this article to devote a few minutes in silence today
  to pay our respects to the eleven Tamils, who sacrificed their life on the
  10th of January 1974 for our cause.
  They are among our MAVEERAR. May their souls rest in peace.
  K. Mylvaganam
  Courtesy: Circle Digest [11 January 2001]
  Reply
    thurai
     Posted on 03/08/2010 at 10:44 pm
    ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல உலகமுழுவதுமே அமைதியையும் ,சமாதானத்தையும்
    தேடிக்கொண்டிருக்கின்றது. இவர்கழுடன் தமிழர்களாகிய நாமும் இணைவதன் மூலம்தான்
    தமிழர்கள்
    உலகில் மனிதர்களாக மதிக்கப்படுவார்கள். எங்களிற்கு எதிரியாக யாரை கருதுகிறோமோ
    அவர்களே
    உலகத்திற்கும் எதிகளாக இருக்கவேண்டும். அப்படி இல்லாவிடில் எல்லோரோடும் நாம்
    அன்போடும் சமாதானத்தோடும் வாழபபழகவேண்டும்.
    இதுவரை தமிழர்களிற்கு ஏற்பட்ட அழிவுகளிற்கெல்லாம் சிங்களவர்களை மட்டும் குற்ரம்
    சொல்லமுடியாது. தமிழர்களிடமிருந்த இன்னமும் இருக்கின்ற மனிதர்களிற்கு உதவாத
    குணங்களே காரணமாகும்.
    துரை
    Reply கடவுள்
   Posted on 03/08/2010 at 5:52 am
  பாதுகாப்பு பேரவை என்ற இயக்கத்தினரால் மட்டக்களப்பில் 1984 இல் ஒரு காவல் நிலையம்
  தாக்கி அழிக்கப்பட்டது என்பது மட்டுமே ஐயரின் பதிவில் கிழக்கு மாகாண செய்தியாக
  உள்ளது பொலிஸ்நிலைய தாக்குதலைவிட பாதுகாப்பு பேரவையால் களுவாஞ்சிக்குடி பொலிஸ்
  நிலைய பொலிசாரின் ஜீப
  வண்டி
  தந்திரோபாயமான முறையில் தமது பொறிக்குள் வரவழைத்து கண்ணிவெடித் தாக்குதல் இடம்
  பெற்றது. இதில் 8 பொலி- உத்தியோகஸ்தர்கள் கொல்லப்பட்டனர். ஆயுதங்களும்
  கைப்பற்றப்பட்டது. வெல்லாவெளி பொலிஸ்நிலைய பொலிஸ்சாரின்ரி ஜீப
  வண்டி மீதும் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தப்பட்டது புலிகளின் பிளவுபட்டிருந்த
  வேளை (1980) அவர்களிடமிருந்து பிரிந்த சில போராளிகளினாலே இத்தாக்குதல்கள்
  நடைபெற்றது. இதே காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் களுவாஞ்சிக்குடி பொலிஸ்நிலைய
  தாக்குதல் ஏறாவுர் பொலி— நிலைய தாக்குதல் காயான்கேணியில் வைத்து வாகரை இராணுவ
  –வண்டிகமீது கண்ணிவெடித் தாக்குதல் தம்பிலுவில் தம்பட்டையில் வைத்து விசேட
  அதிரடிப்படையினரின் ரோந்து படையினர் மீது தாக்குதல் நடைபெற்றது. இதே போன்று
  நிர்மலா நித்தியானந்தனை சிறையுடைப்பு செய்து அதிலிருந்து மீட்டனர். இவையாவும்
  1984—1985 வரை நடைபெற்றவை. இதேபோல் ஈரோஸ் இயக்கத்தினரால் செங்கலடி
  கொடுவாமடுவில் வைத்து விசேட அதிரடிப்படையினரின் ரோந்து அணி மீது பொரியதொரு
  தாக்துதல் நடைபெற்றது. இதில் பெருமளவு பியுதங்கள் கைப்பற்றப்பட்டன. கிரான்
  புலிபாய்ந்தகல் வளைவில் வைத்து விசேட அதிரடிப்படையினர் மீது கண்ணிவெடித்
  தாக்குதல் நடைபெற்றது.
  இக்காலப் பகுதியில் லெபனாண் இந்தியா நாடுகளில் பயிற்சி பெற்ற்
  ஈ.பிஆ.ர்.எல்.எப்,பு ளட்,ரெலோ.அங்கிருந்தும் அவர்களால் ஒன்றும் செய்ய
  முடியவில்லை. மக்களிடமிருந்து சாப்பாடுபார்சல்களை சேகரித்து
  சாப்பட்டுக்கொண்டிருந்தார்கள். 1983 ஆம் ஆண்டு மட்டக்களப்பு பாரிய சிறையுடைப்பை
  தாங்கள்தான் செய்ததென்று ஈ.பிஆ.ர்.எல்.எப்,புளட் இயக்கங்கள் உரிமைகோரிக்கொண்டு
  இருந்தனர். இச்சிறையுடைப்புக்கு பனாங்கொடை மகேவரனின் முயற்சியால் நடைபெற்றது
  ல்ன்பது உண்மை. இவரால் மட்டக்களப்பில் சில இளைஞர்களை இணைத்து 1983 டிசம்பர்
  காத்தான்குடி மக்கள் வங்கு கொள்ளையடிக்கப்பட்டது. சகோரப் படுகொலை எதிலும்
  ஈடுபடவில்லையென நாம் நினைத்துக் கொண்டிருக்கும் ஈரோஸ் இயக்கம் நெப்போலியனை
  கொலை செய்தார்கள் என்று ஐயரின் பதிவில் இருக்கிறது. யாராவது இந்த உண்மையை
  தெரிந்தவர்கள் உறுதிப்படுத்தமுடியுமா?
  Reply
    OORAAN
     Posted on 03/08/2010 at 2:30 pm
    கடவுள்,
    நீங்கள் புலிகளின் முன்நாள் பொருப்பாளரா? அப்படியாயின் உங்கள்ளுக்கு நிறைய
    விடயங்கள் தெரிந்திருக்கும். அவற்றைப்பற்றி எழுதலாமே? உதாரணமாக களுவாஞ்சிகுடி
    போலீஸ் நிலைய தாக்குதலில் பரமதேவாவுடன் இறந்த போராளி (வாமதேவன் என்
    நினைக்கிறேன்), உங்களுடன் இருந்த பிரான்சிஸ், கல்முனையில் முகமூடி அணிந்த
    தங்கமணி என்பவரால் காட்டிகுடுக்கபட்டு விசேட அதிரடிப்படையின் ஆயுதத்தை பறிக்க
    முயன்று முடியாமல் போக சயனைட் அருந்தி இறந்த கருணா. இவரை காப்பாற்ற STF நிறைய
    முயன்றார்கள்.
    சயனைட் அருந்திய பின்பும் STF TRUCK இற்குள் இருந்த தங்கமணியின் முகமூடியை
    கிழித்து அவரின் பெயரை சொல்லி கத்தியவர். கருணாவும் பண்ணையில் இருந்தவரோ
    தெரியாது?
    இப்படி நிறைய, காலத்தால் மறக்கப்பட்ட போராளிகளைப்பற்றி எழுதலாமே?
    Reply மணியம்
   Posted on 03/08/2010 at 4:29 pm
  அண்ணை THOTTA நிங்கள் Posted on 03/08/2010 at 1:33 pm இதுல எழுதினதுக்கு சில
  டவுட்டுகள் அதுதான். கொஞ்சம் நேரம் எடுத்து எழுத்துக் கூடி ஆறுதலாய் வாசித்து
  விளக்கம் தாருங்கோ.
  “தலைவரும்..தளபதிகளும் தங்கள் முடிவில் தெளிவாய்தான் இருந்தவை”
  - என்னத்தில தெளிவா இருந்தவை எண்டு கொஞ்சம் விளக்கமா சொல்ரின்களோ? தாங்கள் இப்படி
  போவோமிண்டோ? இல்லாடி தங்களை நம்பிய, தங்களோட இருந்த மக்களை இப்படி சிங்களவன்
  கொண்டு மண்ணையே அழித்து, அங்கெ இராணுவத்துக்கு தூபியும், சிங்களவனை
  குடியேத்தியும், பிரபாகரன் கொல்லப்பட்ட நந்திக்கடல் ஏரி பக்கத்தில இலங்கை ராணுவம்
  வெற்றிச்சின்னம் அமைப்பினம் எண்டோ? இந்த முடிவு எடுக்க இவ்வளவு காலமே? இந்த
  முடிவை தாங்களே ஒரு பங்கருகில இருந்து ஓரயடியா குண்டை வெடிச்சு எடுத்திருக்கலாமே?
  சனம் தப்பியிருகுமிள்ளே? இல்லாட்டி சூசையோட கப்பல்லே போய் நடுக்கடல்ல வெட்டிச்சு
  இருக்கலாமே?
  “இந்தியன் இராணுவத்துடனான் மோதலில் வடக்கு ,கிழக்கில் 2 லச்சம் இந்தியத்
  துருப்போடு, இரண்டாயிரம் போராளிகளோடுதான் தலைவரும் தளபதிகளும் இரண்டு வருடம்
  போரிட்டனர். கூடவே எட்டப்பர் கூட்டமும் வேற”
  - ஏன் உங்கட பக்கம் பிறேமதாசாவிண்ட அரசாங்கமே பின்னுக்கு இருந்ததே, உங்களுக்கு
  காட்டுக்கை வைத்து ஆயுத சப்பளை செய்தது, மானிப்பாயில் வைத்து ஆயுதத்துடன் எல்ப்
  வானை உங்களுக்கு விட்டிடு போனது. இரண்டு பக்கமும் எதிரிக்கு எதிரி நண்பன் எண்டு.
  இதுல நான் நடுநிலைமை. நிங்கள் ஒன்றாக போராட புறப்பட்ட இயக்கங்களை தடை செய்து
  தமிழ் பெடியளை கொல்ல அவங்கள் இந்தியாவோட செந்தான்கள். இதுல நரியன் டக்கிலஸ் சை
  செக்கேல்லை. அவன் பிழைப்புக்கு யாரோடயும் சேருவான். நிங்கள் இந்தியாவிண்ட தலையீடு
  வேண்டாமெண்டு யாழ்பாணம் லைப்ரரி எரிச்ச, 83கலவரத்தையே தொடக்கிய கூட்டத்தோட
  செந்தீன்கள். ஏன் ஸ்ரீலங்கா ஆர்மி காரன் ஹெலிகோப்டேர்ல ஆயதங்களும் ஆக்களும்
  இறக்கி உங்களுக்கு உதவ புலோட்காரை சுத்திவளைச்சு அடிச்சது மறந்து போச்சோ? அப்ப
  அவங்கள் இந்தியாவோட நின்டவன்களே? ஆனா உண்மையா நடுநிலைமையா சொன்னா நிங்கள்
  மக்களையும் கேடையமா பாவித்து அடிக்க, அவங்கள் தமிழர் எல்லாம் புலியெண்டு மக்களை
  ஈவிரக்கமில்லாமல் கொல்ல, அது உங்களுக்கு வாய்ப்பா போக, மற்ற பக்கத்தில இப்ப
  உங்களோட இருக்கிற மண்டையன் குழுவிண்ட சுரேஷும் புலி, புலியெண்டு சனங்களை ஒரு
  வளிப்பண்ண தமிழ்நாட்டிலையும் அழுத்தம் கூட அவங்கள் விட்டிட்டு போட்டாங்கள். ஆனா
  நிங்கள் உண்மையா நல்லாத்தான் அடிபட்டநின்கள். அவங்கள் பல போர் கண்டவங்கள்.
  உங்களுக்கு முதல் அனுபவம். அப்படியே ஒழுங்கா பிறகும்
  இருந்திருக்கலாமே..உங்களுக்கு ஆயுத டீளுகளுக்கு இராஜிவை கொல்லவேண்டும், முஸ்லிமை
  துரத்தவேண்டும். உங்கட பிரச்சனையே வேறையே. உங்களுக்கு என்னவெண்டால் இப்படியே
  தனிக்காட்டு ராஜாவாக, தனிதர்பார் நடத்தவேண்டும்.
  அதுக்குபிறகு நிங்கள் சொல்றது எல்லாத்திலையும் எனக்கும் உடன்பாடு
  “வெளிப்பார்வைக்கு என்னவோ சிங்கள்வர் , புலிகள் மோதல்.ஆனால் உள்ளுக்குள்
  உண்மையில் இதுதான்நடந்தது.”
  - நிங்களும் அப்படிதானே. அவங்கள் இப்ப வெளிநாடுகளோட சேந்து உங்களை அடிக்க.
  நிங்களும் முந்தி, பிரேமதாசாவோட டீல், ரணிலோட டீல், ஏன் பிறகு இந்த
  மகிந்தவோடையும் டீல் வைச்சு நிங்கள் தானே கொடு வந்தநீங்கலாமே? ஏன் முந்தி
  இந்தியாவோடையும் ஆயுத்துக்காக டீல் வைச்சு 85இல அநுராதபுரத்தில அடிச்சது
  மறந்துபோச்சோ? உனக்கான டீலுகளால சனம் தானே செத்தது. அதுசரி, உங்களைத்தானே முழு
  உலகமும் அன்கீகர்சு இருக்கிண்டு சொல்றீங்கள்? வைகோ, நெடுமாறன், தம்பி சீமான்,
  கேப்டன் விஜஜகாந்த், ராமதாசு எல்லாரும் இருந்தினமே? உடனை படகேறி வந்து
  இருப்பினமே? என்ன நடந்தது?
  ஆனாப் பாருங்கோ “கிளிநொச்சி வீழ்ச்சிக்குப் பிறகு இந்த 4 ஆம் கட்டப் போரில்
  வெல்ல முடியாது என்று தலைவருக்குநன்றாஅகவே தெரியும்.”
  - அப்ப ஏன் பாருங்கோ இவ்வளவு சனத்தையும் தன்னோட வைத்துகொண்டு சேந்த, பிடிச்ச
  பெடியள், பெடியள், சனத்தையும் சாகடிச்சு, மிச்ச சனத்தையும் உடுத்த உடுப்போட
  முள்ளுக்கு கம்பிக்கேயும், இராணுவம் கற்பழிப்பு எண்டு எல்லாக் கொடுமையும் செய்ய
  விட்டு தன்ரை மனுசி மகள் மகனையும் ஏன் அவங்களுக்கு இரையா கொடுத்தவர்? இதை கொஞ்சம்
  விளக்கமா சொல்ரின்களோ?
  “அப்போது கோட தலைவர்நினைத்து இருந்தால் கூட, ஒட்டிசுட்டான் வழியே மணலாறுக்கொ
  எங்கோ தப்பிப் போய் இருக்கலாம். ஆனால் அவெர் போகநினைக்க வில்லை.”
  - ஏன் பாருங்கோ அவர் நினைக்கேல்லை? நினைக்க நேரம் இல்லையோ? தப்பிப் போகலாம் எண்டா
  சிங்களவன் தொடந்து இரவு பகலா அடிக்க அவருக்கு தொடந்து நித்திரை இல்லாமல் நடக்க
  முடியாம போச்சோ?
  “போராட்டம் அழிக்கப் படவில்லை.தலைவரால் சடுதியாக முடிக்கபட்டு, அடுத்த
  கட்டத்துக்குநகர்த்தப் பட்டிருக்கிறது.”
  - போராட்டம் அளிக்கப்படவில்லை தான். ஆனா அது என்ன “சடுதியாக முடிக்கபட்டு, அடுத்த
  கட்டத்துக்குநகர்த்தப் பட்டிருக்கிறது.” எனக்கு ஒண்டும் விளங்கேல்லை. எந்தக்
  கட்டத்துக்கு நகர்த்தப்படிருக்கு? கட்டடமும் ஒண்டும் இல்லை நகத்திரத்துக்கு,
  உங்கட தீர்க்க தரிசனம் எல்லாம் குண்டு போட்டு அழிச்சிட்டான், சனத்தையில்லோ
  நரகத்திக்கு நகர்த்தி இருக்கிங்கள்.
  ஆனா அது பாருங்கோ உங்கண்டை போராட்டம் மாதிரியும் இல்லாமல் இவன் டக்ளுஸ் எண்ட
  போராட்டம் மாதிரியும் இல்லாமல் புது மக்கள் எழுச்சியோட வரும் பாருங்கோ. அதுதானே
  இப்ப “மே 8 ” காரர் சொல்லினம். இது “முடிவல்ல; தொடக்கம் எண்டு”. அதோட இப்ப இந்த
  “புதிய ஜனநாயக கட்சி” காரரும் வைக்கிற ஒரு மாறுபட்ட அரசியலை பாருங்கோ. ஆதலால இனி
  உங்கடை இந்த தீர்க்கதனமான அரசியல், இராஜதந்திரம் எண்ட பம்மாத்தை எல்லாம்
எடுக்காது
  “எங்கள் தலைவனின் தீர்க்கதரிசனம் கண்டுநீங்கள் எல்லாம் “வாய் ” பிளக்கும் காலம்
  வெகு , வெகு விரைவில் வரும்”
  - ஓம் ஓம் உங்கட தீர்க்கதரிசனம் “வாய் ” பிளக்கும் காலம் வெகுவிரைவில் வரும்
  இல்லை, வந்துவிட்டுது. வந்து ஒரு வருஷமா போகப்போகுது. அதுதானே ஒருநாளும்
  அடுத்தவனிட்ட கயேந்தாத சனத்தை ஒரு மிடறு தண்ணிக்கு கூட “வாய்” பிளக்க
  வச்சிட்டீங்களே?
  ஏன் உங்கடை இந்த கூட்டமைப்புக்கு என்ன நடந்தது? அதையும் நேரம் இர்ருக்கேக்க
  கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கோ.
  அதோட முந்தி துரோகி, துரோகிஎண்டு எல்லாரையும் போட்டிங்களே. இப்ப கூட்டமைப்பில
  யார் யார் துரோகி?
  சகலகலாவண்ணன் பொட்டர் எங்கை இருக்கிறார்?
  ஜார்ஜ் மாஸ்டர், தயா மாஸ்டர், உலகம் சுத்திய பாலகுமாரு இவையெல்லாம் என்ன
  செய்யினம்?
  அதுசரி, தலைவருக்கும் மதிவதனிக்கும் பிள்ளை வயித்தில இருக்கேக்க கூட இருந்து
  கலியாணம் செய்ஞ்சு வைச்சு போட்டோ எல்லாம் எடுத்த பிறகு உங்கள் எல்லாருக்கும்
  தலைவரான கே.பி என்ன செய்யிறார்? அப்ப அவர் பொருப்பில இருந்த நிங்கள் எல்லாரும்
  கொடுத்த காசெல்லாம் எங்கை? எதோ அவற்றை பெயரில கன கப்பலுகள், வியாபாரம்,
  தோட்டங்கள் எல்லாம் இருந்ததாமே எல்லாம் என்ன நடந்தது.
  “விடுதலைப்புலிகளுடனான போரில் வெற்றி பெற்றதன் அடையாளமாக, பிரபாகரன் கொல்லப்பட்ட
  நந்திக்கடல் ஏரி அருகே இலங்கை ராணுவம் வெற்றிச்சின்னம் அமைத்து வருகிறது”
  “இறுதிக்கட்ட போர் நடைபெற்ற புதுக்குடியிருப்பில் ஒரு வெற்றிச்சின்னம் ஏற்கனவே
  நிறுவப்பட்டுள்ளது. அதில், போரில் பங்கேற்ற ராணுவப் படைப்பிரிவுகளின் பெயர்கள்
  செதுக்கப்பட்டுள்ளன.”
  “இதற்கிடையே, போர் முடிவடைந்து ஓராண்டு ஆகியும், இறுதிக்கட்ட போர் நடைபெற்ற
  பகுதிகள், இன்னும் அலங்கோலமாக காட்சி அளிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
  குறிப்பாக, வெள்ளிமுள்ளிவாய்க்கால், நந்திக்கடல் உள்ளிட்ட பகுதிகளில், 10 ஆயிரம்
  மோட்டார் சைக்கிள்களும், 25 ஆயிரம் சைக்கிள்களும் அனாதையாக கிடக்கின்றன. இவை
  விடுதலைப்புலிகளுக்கும், அப்பாவி தமிழர்களுக்கும் சொந்தமானவை ஆகும்.”
  “தமிழர்கள் வசித்து வந்த குடிசை வீடுகளும், கான்கிரீட் வீடுகளும் இடிந்து
  கிடக்கின்றன. ராணுவம் பயன்படுத்திய குண்டு துளைக்காத லாரிகள், ஜீப்கள் ஆகியவையும்
  போரின்போது தாக்கப்பட்டு சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன.”
  “முல்லைத்தீவு கடல் பகுதியில் வேறு பகுதிகளை சேர்ந்த மீனவர்களை குடியேற்றுவது
  குறித்து இலங்கை அரசு பரிசீலித்து வருகிறது. இதற்காக இலங்கை மந்திரி மில்ராய்
  பெர்னாண்டோ அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.”
  “அனாதையாக 35 ஆயிரம் வாகனங்கள்”
  அண்ணேய் THOTTA, மேலே இருக்கிற செய்திக்கு என்ன சொல்றிங்கள்?
  தலைவரும்..தளபதிகளும் தங்கள் முடிவில் தெளிவாய்தான் இருந்தவை எண்டோ? இல்லாட்டி
  இதுதான் அடுத்த கட்டத்துக்குநகர்த்தப் பட்டிருக்கிறது எண்டோ? இல்லாட்டி தலைவனின்
  தீர்க்கதரிசனம் கண்டு நாங்கள் எல்லாம் “வாய் ” பிளக்கும் காலம் வெகு , வெகு
  விரைவில் வந்திட்டுதேண்டோ?
  அண்ணேய் THOTTA, இந்த வெப் சைடு ஒரு “மாற்று அரசியலுக்கான உரையாடல் வெளி” எண்டு
  வச்சிரிக்கினம். ஆனபடியால இனிமேல் நிங்கள் இந்த டவுட்டுகளுக்கெல்லாம் பதில்
  எழுதேக்க உங்களுக்கு ஒரு தனி வெப் சையிட்டை (blog) தொடக்கி எழுதுங்கள். இங்கை
  நிங்கள் இதுகளை எழுத நாங்களும் எங்கண்ட நேரத்தை வீணடிச்சு, வெப் சைடு நடத்திரவன்ர
  இடத்தையும் வீணடிச்சு, அவை இதை அப்டேட் பண்ற நேரத்தியும் வீணடிச்சு. இது
தேவைதானே?
  “மெனிக்பார்ம் கேம்பிலும், அருணாசலம் கேம்பிலும்தான் இன்னும் எனது பெற்றோரும் ,
  உறவுகளும் இருக்கினம்.நீர் எனக்கு கதை சொல்லதேயும்.” Posted on 03/07/2010 at
  7:51 pm
  - இப்பத்தான் பாத்தன் உங்கடை பெற்றோரும் , உறவுகளும் மெனிக்பார்ம் கேம்பிலும்,
  அருணாசலம் கேம்பிலும் இருக்கினம் எண்டு. அதுக்கு என்னுடைய அனுதாபங்கள்.
  உங்களுக்குக்கு அப்படி, என்னுடைய உறவுகள் குண்டடிபட்டு இறந்தே உள்ளனர். அவர்களின்
  குடும்பத்தாரே அவர்களின் உடல் எடுத்து தகனம் செய்ய முடியாத நிலை. ஆனா இதுக்கு
  எல்லாம் யார் பாருங்கோ காரணம்? திரும்பவும் “எங்கள் தலைவனின் தீர்க்கதரிசனம்
  கண்டுநீங்கள் எல்லாம் “வாய் ” பிளக்கும் காலம் வெகு , வெகு விரைவில் வரும்” எண்டு
  சொல்லப்போரின்களோ? இல்லாடி “தலைவரும்..தளபதிகளும் தங்கள் முடிவில் தெளிவாய்தான்
  இருந்தவை” எண்டோ? இல்லாட்டி “வெளிப்பார்வைக்கு என்னவோ சிங்கள்வர் , புலிகள்
  மோதல்.ஆனால் உள்ளுக்குள் உண்மையில் இதுதான்நடந்தது.” எண்டு சொல்லி புலியும்
  சிங்களவனும் சேந்து தமிழனை இந்த நிலைக்கு கொண்டு வந்தது எண்டு சொல்லப்போரின்களோ?
  ஆனா உங்கட குடும்பமும் சேத்துத்தானே?
  ஆனா அண்ணை THOTTA இங்கை சும்மா விதண்டாவாதத்துக்கு “மெனிக்பார்ம் கேம்பிலும்,
  அருணாசலம் கேம்பிலும்தான் இன்னும் எனது பெற்றோரும் , உறவுகளும் இருக்கினம்.நீர்
  எனக்கு கதை சொல்லதேயும்” அப்படி மட்டும் எழுதாதையுங்கோ.அது கடைசியில உங்கள்
  குடும்பத்துக்கே நிங்கள் செய்யும் துரோகம் ஆகி விடும், இண்டைக்கு மற்றவற்றை
  பிள்ளைகளை பிடித்த பிரபாகரனுக்கு என்ன நடந்ததெண்டு பாத்தீங்கள் தானே. உட்கொலையில
  பிரசித்தம் பெற்ற புளொட் தலைவரை யார் போட்டது? அவெண்டை ஆக்கள்தானே. உத்தரத்தில
  ஒன்பது பேரை சுட்டு கட்டி தொங்க விட்ட டெலோ ஸ்ரீக்கு என்ன நடந்தது? புலியும்
  கயிறு கட்டி புகையில தோட்டதுக்கை இழுத்தது. ஆன படியா THOTTA அண்ணை திரும்பவும்
  சொல்றன் விதண்டாவாதத்துக்கு எழுதாதையுங்கோ. எங்கடை நேரத்தையும் உங்கடை
  நேரத்தையும் வீணாக்காதையுங்கோ. நானும் இண்டைக்குத்தான் லீவு நாள் உங்கடை செய்தியை
  வாசிச்சு என்னை எழுத வச்சிடின்கள். உங்களை போல சொந்தக் கம்ப்யூட்டர் வைத்து
  டெய்லி நியூஸ் பாத்து எழுதிக்கொண்டு இருக்கமுடியாது. ப்ளீஸ். வணக்கம் அண்ணை.
  Reply
    Naren
     Posted on 03/08/2010 at 10:06 pm
    மணியண்ணை!… 30 வருடமாய் உங்கட தலைவர் தமிழ்மக்களின் பணத்தையும் இரத்தத்தையும்
    கொள்ளையடிச்சு உறிஞ்சிச் குடிச்சதை தவிர அவர் தன்னுடைய மக்களுக்கு செய்த
    ஏதாவது ஓர் நன்மையை விளக்க முடியுமா என்று கேட்டால் அதற்கு உருப்படியான ஒரு
    பதில் சொல்ல வக்கில்லாத இந்த ஒட்டுண்ணிகளுக்கு இவ்வளவு பெரிய விளக்கம தேவையா?.
    தவிர தன்னுடைய மக்கள் மக்கள் என்று சொல்லும் இந்த பங்கர் தலைவன் தன்னுடைய
    மக்கள் முன்பாக என்றாவது ஒரே ஒருதடவையாவது தோன்றியிருக்கின்றாரா?…
    பங்கர்தவளையாகவே காலம் முழுதும் கிடந்து போட்டு எங்களை வேறு கிணத்து
    தவளையென்று கிண்டல் அடிக்குதுகள். காட்டுக்கூட்டங்கள்.
    Reply THOTTA
     Posted on 03/09/2010 at 8:53 am
    அய்யா மணியம் ” மனுநீதிச்சோழனிட்ட ” மாடு மணி அடிச்சு நீதி கேட்ட மாதிரி,
    இவ்வளவு இனப்பற்று, மொழிப்பற்று, மண் பற்று, ஊர்ப்பற்று ( இன்னும் எதாவது
    பற்று விடுபட்டால் மன்னிக்கவும்) இருக்கிறநீர், மக்களை ஒன்று திரட்டி கொண்டு
    போய் தலைவரிட்டநீதி கேட்டிருக்கலாம்தானே( கேட்டா ..எங்க..உயிரோட விடுவார
    எண்டு கேட்பியள்….சமுதாய அக்கறை உள்ளவையள்,நிறைய பற்று உள்ளநீர் உயிர் விடத்
    தயாராய்தான் இருக்கணுமய்யா)
    வோட்டர்ஜெற், மின்னல், பலவேகஜ, சத்ஜெய,ஜெய்சிக்குறு எண்டு எல்லாச் சமரிலும்
    தலைவர் வெண்டு,வெற்றியை தங்கத்தாம்பாளத்தில வைச்சுத் தர,நீங்களும் நோகாமல்
    “நொங்கு” திண்டு போட்டு , இண்டைக்கு தலைவர் முள்ளிவாய்க்காலில் தோற்றுப்
    போனார் எண்டவுடனே, ஏன் அண்ணே , வானத்துக்கும் , பூமிக்கும் துள்ளுறியள்.
    தலைவர் தமிழ் இனத்தை தவிக்க விட்ட துரோகி, பாவி எண்டுறியள், அப்ப ” எல்லாளன்
    யார் அண்ணே.அண்டைக்கே அவெர் துட்டகைமுனு வோட போட்ட “டீலால்” தானே
    அனுராதபுரமும் போச்சே அண்ணே.ஏன் இங்காலேநம்ம சங்கிலியனும், பண்டாரவன்னியனும் ,
    மரணத்துக்குப் பயந்து , மானத்தை இழந்து வெள்ளையரோட “டீல்” போட்டிருக்க வேணும்
    எண்டு சொல்ல வாறியளோ அண்ண. இவெர்கள் எல்லாம் உயிரைவிட, மானம் பெரிது எண்டு
    வாழ்ந்தவர்கள். எங்கட தலைவரும் இதே பரம்பரையில் தான் அண்ணே வந்தவர்.
    உங்களுக்கு தமிழீழம் வேணும் , ஆனால் உயிர் போகக் கூடாது,சுகம்
    கெடக்கூடாது,சொத்து அழியக் கூடாது எண்டால்நாங்கள் என்ன அண்ணே
    பண்ண.மந்திரத்தால் மாங்காய் புடுங்கிறது எண்டுநினைச்சியளோ, தமிழீழம் பெறுவது
    எண்டால்.
    அண்ணே “கல்லெனப் பாத்தால் கடவுள்தெரியாது,”கடவுள் எண்டு பாத்தால் கல் லெனத்
    தெரியாதெண்ணே. இதுவே உங்கட மொழியில சொல்ல வேணும் எண்டால், கல்லைக்
    கண்டால்நாயைக் காணம்,நாயைக் கண்டால் கல்லைக் காணம் எண்டு சொல்லுறது அண்ணே.
    நாங்கள் எல்லாம் “புலிகளின் போராட்டத்தை , தமிழரின் போரா ப்ட்டமாய்த்தான்
    பாத்தனாங்கள். ஆனால்நீங்கள் எல்லாம் ” தமிழரின் போராட்டத்தை, புலிகளின்
    போராட்டமய்த்தான் பாத்திட்டியள்.புலிகளை தோக்கடிக்கிரோம் எண்டு
    ,நக்கிநாவிழந்து, சிக்கிச் சீரழிந்து ,தமிழரின் போராட்டத்தை நாறடிச்சு
    கடசியிலநீங்கள் தான் எங்களைநடுத்தெருவில விட்டுட்டியள் அண்ணே.
    தலைவரும், கூட இருந்ததுகளும் விட்டுப் போக,நம்பினதுகளும் குழிபறிக்க ஒரு
    பக்கம், இன்னுமொரு பக்கம் சிறி லங்கன் ஆர்மியப் பாக்கணும், எட்டப்பர்களை
    சமாளிக்கணும்( ஒண்டா, ரெண் டா, யப்பா),இதுக்குநடுவில இந்தியன் ” றோ”வின்ர
    சித்து விளையாட்டுகள் வேற, இப்படி எல்லாத்தையும் சமாளிச்சுதான் அண்ணே
    போராட்ட்த்தை இந்தளவுக்கு வளத்தவர்.நீங்கள் 35 லச்சம் சனக் கூட்டமும் ,35
    வகையாய், சாதி, சமய, பிரதேசவாதமாய் பிரிந்து கிடக்க,உங்களை எல்லாம் ஒன்றாக்கி,
    சார்ள்ஸ்-அன்ரனி சிறப்புப் படையணி,ஜெயந்தன் படையணி,சோதிய படை அணி, கிட்டு
    பீரங்கிப் படை அணி எண்டு தரப் படையணியையும், அங்கால கடல் படை, விமானப் படை,
    கரும்புலி படை அணி எண்டு எல்லாத்தையும் அந்த” வன்னி பங்கருக்குள்ளே இருந்துதான்
    அண்ணே செய்தவர்.
    அண்ணே மணியண்ணே, வன்னிக்குளம் வான் பாயும் பொளுது, எதிர்த் திசையில ஆயிரம்
    மீன் பாயும் அண்ணே; ஆனால்” ஒன்றோ அல்லது ரெண்டு ” மீன் தான் அண்ணே அந்த வான்
    கட்டைமீறி குளத்தில போய் விளும்.அந்த ஒரு மீனை போலா தான் அண்ணே எங்கட
    தலைவரும்,நீங்கள் “டீல்” எண்டு சொல்லுற ” இராஜதந்திரத்தைப்” பாவித்துஇத்தனி
    வருசமாய் போரைநடத்தினவர் அண்ணே:தலைவரின் கால் தூசுக்கும்நீங்கள் எல்லாம் சமன்
    இல்லை அண்ணே.
    தலைவரும் , தளபதிகளும் என்ன முடிவைநினைச்சவையோ, அந்த முடிவில அவை
    உறுதியாய்தான்நிண்டவை.ஆயிரக்கணக்கில் காயம் பட்ட போரளிகள், அவெர்களது
    குடும்பங்கள், விடுதலைக்காவே கடசிவரை உழைத்தவர்கள்,அ வர்களது குடும்பங்கள்,
    உறவுகள், விசுவாசிகள், கடசிவரை புலிகளொடே வந்த மக்கள், ஊனமற்ற போரளிகள் எண்டு
    எல்லரையும் விட்டு, தலைவர் காட்டுக்குப் போய் உயிர் பிழைக்க , தலைவர் ஒண்டும்
    உம்மை போல இல்லை மணியம்.எந்த மக்களுக்காகப் போராடினாரோ, அந்த மக்களுக்காவே
    அவெர் கடசி வரையும் களத்தில்நின்றார்.தலைவர் மேதகு பிரபாகரனை துரோகி
    எண்டுநீரும் ,நரேனும் , துரையும் தீர்மானிக்க முடியாது.அதே போலா அவெரை மாவீரன்
    எண்டுநானும் தீர்மானிக்க முடியாதெண்ணே.ஆனால் அவெரை எம் மக்கள் எப்பவோ மகா
    வீரன் எண்டு தீர்மானிச்சதாலேதான், 35 இலச்சம் மக்கள் கூட்டத்திலிருந்து 35
    ஆயிரம் மாவீரர்களை அவெருக்கு குடுத்தவையண்ணே:
    அண்ணே எனக்கு உரு ஆடி ,குழை அடிக்கிறதை விட்டு, உருப்படியாய் எங்கட
    போராட்டத்துகு உதவி செய்யிற வழியைப் பாருங்கோண்ணே.
    உங்க “தியேட்டரில”கவுதம்மேனனின் “விண்ணைத்தாண்டி வருவாயா” படம் வெற்ரிகரமாய்
    ஓடுதாம், போய் பாத்துட்டு, குமுதத்துக்கோ இல்லாட்டி குங்குமத்துக்கோ
    விமர்சனம் எழுதுங்கோ அண்ணே “நக்கி நாவிழந்த”நீங்கள் எல்லாம் எங்கள்
    தலைவனையும், புலிகளையும் விமர்சிக்க எந்த அருகதையும் இல்லை அண்ணே உங்களுக்கு.
    தோட்டா(ஜேர்மனி)
    Reply
      Naren
       Posted on 03/09/2010 at 10:17 am
      ஐயா “தோட்டா” காட்டானே பழைய காலத்து கிழட்டு ரேடியோ மாதிரி சொன்னதையே
      திரும்பத திரும்ப சொல்லி எங்களையும் உங்க காலத்து “வங்கர்” தவளையா மாத்துற
      முயற்சியை கைவிட்டு விட்டு முடிந்தால் நீரும் வங்கரை விட்டு வெளியே வர
      முயற்சி செய்யும். இப்போதான் வெள்ளைக் கொடியை தூக்கி உங்க “வங்கர் தவளை”
      வழிகாட்டியிருக்கின்றாரே?…வானரங்கள் நீங்களும் பின்னாலே தூக்கி கொண்டு
      போகவேண்யதுதானே?… ஆமா!!! சங்கிலியன் -பண்டாரவன்னியன்- எல்லாளன்
      பற்றியெல்லாம் கயிறு விட்டிருக்கிறீங்க?…சார்!!! அவங்களெல்லாம் வெள்ளைக்
      கொடி தூக்காத உத்தமர்கள் சார்!! தவிர காலம் பூரா வங்கருக்குள்ளே கிடந்த
      தவளைகளும் இல்லை!!! விட்டால் அன்னை “தெரேசாவும்” எங்கட தலைரிட்டதான்
      படிச்சவர் என்று சொன்னாலும் சொல்லுவீங்க போலிருக்கே!! பார்த்து சார்!!…
      இதுவரைக்கும் உங்ளை கோவணத்தோடயாவது விட்டு வைத்தான் இப்படியே போனீங்க……
      உங்க அதையும் உருவி அதுக்குள்ளேயிருக்கிறதையும் உருவிப்போடுவான்.
      Reply
        katte-thura
         Posted on 03/10/2010 at 7:27 pm
        .நரேன் நீங்கள் 30 வருசமாய், புலிகள் மாற்று இயக்கங்களை அழிச்சார்கள்,
        அவிச்சார்கள் எண்டு- முக்கி , ஓலமிடுறியள் , அது எந்தக் காலத்து
        றேடியோவாம்….கீ….கீ..கீ
        இனிஒரு இணையத்தளத்தில்´ … , போய் உழைச்சு குடும்பத்தைப் பாக்குற வழியைப்
        Reply thurai
       Posted on 03/09/2010 at 12:36 pm
      தோட்டா ஜேர்மனியில் பொலிசாரால் பிடிபட்ட உங்கடை பணம்
      பறிக்கும்
      படையைப்
      பற்ரி எதாவ்து சொல்லுங்கோவன்.
      உங்களிட்டை முப்படை இருந்ததாக்க்கூறித்
      தம்பட்டம் அடித்த்து காணும். எனக்குத் தெரிய இருந்த் முப்படை.
      1) பணம் பறிக்கும் படை (2) பிள்ளைபிடிக்கும் படை (3) கொலைகாரப்படை.
      புலிக்கும் விடுதலலை என்னும் சொல்லிற்கும் என்ன சம்பதம்?
      துரை
      Reply thurai
       Posted on 03/09/2010 at 8:14 pm
      தோட்டா பாவம் எல்லோருமாக் அவ்ரிடம் ஏன் வம்புக்குப் போவான்.
      அவருக்கும்
      சாதாரண் மக்கள் போல தலைவ்ர்,,புலிகள், த்மிழீழம், விடுதலை என்று
      உசுப்பேத்தப்பட்டவ்ர்தானே. உலக்த்தை ஏமாற்ரி சுருட்டிய பணம் எங்கே என்று
      கேட்டு
      சுவிசிலை
      கட்ன் எடுத்துக் கொடுத்தவை எல்லாம் கழுத்திலை க்யிறு போட நிக்கினம்.
      பண்த்தைச் சுருட்டியவை உலக்த் தமிழ்ர் பேரவையெனச்
      சொல்லி புலிக்கு பசுத்தோல் போத்தி வைச்சிருக்கினம். வன்னிக்கே தமிழீழ
      அரசு காட்டி முடிந்து இப்ப புலத்தில் காட்டப் போகினம். இதுக்க தலைவர்
      இருக்கிறாரா இல்லையா என்பது ஒரு பக்கம். தோட்டாவிற்கு நாங்கள் தான்
      ஆறுதல் கூற் வேண்டும். துரை
      Reply mamani
       Posted on 03/11/2010 at 12:09 am
      அண்ணே “நக்கி நாவிழந்த”நீங்கள் எல்லாம் எங்கள் தலைவனையும், புலிகளையும்
      விமர்சிக்க எந்த அருகதையும் இல்லை அண்ணே உங்களுக்கு.
      தோட்டா(ஜேர்மனி)
      தோட்டா அதிகம் வார்த்தை பிரயோகம் வேண்டாம் சிங்கள இராணுவத்தின் சப்பாத்து
      காலைநக்கிய புலித்தலைகளும் உண்டு
      Reply selva
   Posted on 03/08/2010 at 7:13 pm
  தம்பி தோட்டா, தமிழர்களை ஒரு 5 வருடமாவது நின்மதியாக வாழவிடு. படிக்காதவனுக்கும்
  அறிவிருக்கும் ………! உன் தலைவன் உயிருடன் இருக்கிறான், வரட்டும்ம்ம்ம்,
  உன்னைப்போல் அறிவிருக்கும் ………… என்னசெய்யபோகின்றான்??? அய்யாவை தொடரவிடு.
  முடிவு தெரியும், ஆரம்பம் ஓரளவு தெரிந்தால் தவறுகளை சரிசெய்யலாம். சிங்களவனுடன்
  நண்பனாக.(முடிந்தால்?) உன்னைப்போல் ……….
  Reply venu
   Posted on 03/09/2010 at 7:57 am
  கடவுள் ,ORAAN காலத்தால் மறக்கப்பட்ட பலர் உள்ளனர், பாதுகாப்பு பேரவை கிழக்கில்
  இயங்கியது போல நாகபடை, ஈஸ்ரன்குறுப் என இரு குழுக்கள் 1983யில் இயங்கியது பின்னர்
  இரு குழுக்கள் புலிகளோடுஇணைந்துகொண்டனர்
  Reply சருகு
   Posted on 03/09/2010 at 8:55 am
  இந்த பக்கத்தால போகும்போது ஒரு கிணத்துக்குள் ஒரே சத்தமாக இருந்தது
  .எட்டிப்பார்த்தால் கிணற்றுத்தவளைகள்.
  எல்லாருக்கும் ஒருவர்தான் மையம் அது பிரபாகரன். சிலருக்கு அவர்
  பெரியவர்.உரியவர்.சிலருக்கு அவர் வெறுப்புக்கு உரியவர்.
  ஒரு தவளக்கும் உலகத்தை தெரியவில்லை.என்னநடக்குது என்று புரியாமலயே  சத்தம்
  பலமாயிருக்கிறது.
  40000 போராளிகள் 100000 சனம் செத்தும் புத்தி வராத இனம்.
  ஈன இனம் இன்னும் இருனூறு வருடத்துக்கு அடிமையாகத்தான் இருக்கும்.
  அதுக்கு பிறகு இருக்காது இந்த இனம்.
  Reply Naren
   Posted on 03/09/2010 at 6:29 pm
  எடதம்பி தோட்டா!!.. எங்கடமேதகு சூரியன் உயிரோட “இருக்குதா? இல்லையா? ” நானும்
  இதைப்பற்றி
  பலபேரிடம் விசாரிச்சு “ஆம் அல்லது இல்லை” என்று ஒரே சொல்லில் பதில் சொல்லச்
  சொன்னால்… நான் எதையோ கேட்க அவங்கள் ஏதேதோ பித்தலாட்டக் கதையெல்லாம்
  சொல்லுறாங்கள்!!! நீராச்சும்
  உண்மையைச் சொல்லுராசா!.. இருக்கிறாரா? இல்லையா?.. – ஹி!..ஹி!..ஹி!…இதிலே
வேடிக்கை
  யென்னவென்றால்…. நீர் இருக்கிறார் என்று சொன்னாலும் கல்லெறிவோம் இல்லையென்று
  சொன்னாலும் கல்றெிவோம். இருக்கிறார் என்று சொன்னால் ஏன்இருக்கிறார் என்று
  கேட்டு கல்லெறிவோம்; இல்லையென்றால் ஏனில்லையென்றும் கேட்டு கல்லெறிவோம். –
  பின்னே.. இருக்காதா!!!.. ஒரு லோடு கல்லை வாங்கி வைத்துக் கொண்டு முல்லைத்தீவிலே
  கொண்டு போய் வங்கரைக் கட்டி அதிலே தவளைகளை விட்டு.. குடும்பத்தோடு
  கூட்டிக்கொண்டுபோய் பக்கத்திலே இருக்கிற “சுவிம்மிங்பூல்” இல் குளிப்பாட்டவா
  முடியும்?.. ம்..ம்..ம்!! சொல்ல மறந்துட்டேனே…!! தவளைகளுக்கு ஒரு காலம் வந்தால்
  “தத்துவெட்டிகளுக்கும்” ஒரு காலம் வருமாம்!!.. – பின்குறிப்பு சார்ர்ர்!! “ரொம்ப
  எமோசன் ஆகிடாதீங்கோ” எமோசன் ஆகினால் கருப்புத்துண்டை ஞாபகத்தில் வைத்து
  கன்றோல் பண்ணுங்கோ!!
  Reply
    THOTTA
     Posted on 03/11/2010 at 7:17 am
    நரேன் , தலைவர் ” ஒற்றைக் காலில் நிண்டு ,தவம் செய்து” சிவனிட்ட என்ன ”
    சாகாவரம்” பெற்றவரோ இந்த மண்ணில் மரணமே இல்லாமல் வாழ்வதற்கு.
    பகவான் சிறிவிஸ்ணுவின் பத்தாவது அவதாரமோ “தப்பும் செய்யாமல் , தவறும் விடாமல்
    ” மக்கழை எல்லாம் வழிநடத்துவதற்கு.
    இவை இரண்டும் இல்லாவிட்டாலும், தலைவர் உம்மைவிட , என்னைவிட ஏன் ஒட்டுமொத்த
    தமிழரை விட உயர்ந்த பண்புகளையுடையவராயும், தமிழையும் , தமிழ்
    மண்ணையும்நேசிக்கின்ற ஒருநல்ல தலைவனாகவும், மண்ணையும் , மக்கழையும்
    பாதுகாக்கின்ற ஒருநல்ல பாதுகாவலனாயும் தான் எப்பொதும் இருக்கிறார்.
    தலைவர் இருக்கிறாரோ இல்லையோ எண்டு கேட்கின்றநீர், முதல்லெ இந்த மூண்டு
    கேள்விக்கும் , “கண்ணால் கண்டேன் எண்டு ” , நீர் ” காணாமல் போகாமல் பதில்
    சொல்லும் ” , பிறகுநான் உம்முடைய கேள்விக்கு சரியான பதிலைச் சொல்லுறேன்.
    உயிரினம் எல்லாம் சுவாசிக்கிறம் , ஆனால்” காற்றை” எங்காச்சும் கண்டீரோ ?மரம்
    அசையுது , கிளை ஆடுது, அலை அடிக்குது, அப்ப காற்று இருக்கதானே வேணும் எண்டு,
    சொல்ல வாறீரோ..
    கடவுளைநீரும் காணவில்லை ,நானும் காணவில்லை , யாரும் காணவில்லை, அதுக்காக கடவுளே
    இல்லை எண்டு சொல்ல வாறீரோ
    அப்படியே போகிற போக்கில்,மின்சாரத்தை கண்ணாலே காணவில்லையே எண்டு போட்டு,
    மின்சாரக்கம்பியில கையைவைச்சு உறுதிப்படுத்தப் பாக்கப்போறீரோ.
    என்ன , பதில் தேட கஸ்டமாய் இருக்கோ.உண்மையை தேடுவதும் ,அறிவதும் அவ்வளவு
    இலகுவானது எண்டுநினைத்தீரோ..? இந்தக்கேள்விக்கெல்லாம் பதிலைக் கண்ணாலே கண்டு
    உறுதிப்படுத்தி வாரும்,நானும்…..உலகத்தமிழினத்தின் ஒரேதலைவன் சூரியத்தேவன்
    இருக்கிறாரோ ,இல்லையோ எண்டு பதில் சொல்லுறன்.
    Reply
      Naren
       Posted on 03/11/2010 at 9:07 am
      இருக்கிறரா/ இல்லையா? ஆமா/ இல்லையா?… தோட்டாவென்று பெயரை வைத்துக் கொண்டு
      புண்ணாக்கு கதை சொல்லிக்கொண்டிருக்கின்றீர்?… மின்சாரம்-காற்று-நீர்-நிலம்
      இதெல்லாம் எங்களுக்கும் தெரியும் நான் கேட்டது இருக்கிறாரா? இல்லையா?
      திரும்பவும் கேட்கின்றேன்?.. அந்த!… அது!… இருக்குதா இல்லையா?..
      Reply
        Santiago Bernabeu
         Posted on 03/14/2010 at 7:08 am
        No doubt man he is no more. he kicked the backet on 18-05-2009. ippo
        santhosama Nren and thurai? allathu unkalukkum death certificat
        kaaddanuma ?
        Reply thurai
       Posted on 03/11/2010 at 12:46 pm
      தமிழீழம் இல்லை. புலிகள் இல்லை, விடுதலைப் போர் இல்லை.
      இனி எதற்கு
      என்னத்திற்கு, யாருக்கு, யார் தலவர்? தமிழன் ஒவ்வொருவனிற்கும் அவனவனே
      தலைவன். துரை
      Reply Sivakumaran
   Posted on 03/10/2010 at 2:26 am
  நரேன், நீங்கள் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கிறீர்களா? தமிழீழ
  மக்கள் விடுதலையடைவார்கள் என்று நம்புகிறீர்களா? இதற்கு பதிலறிய ஆவலாகவுள்ளேன்.
  Reply
    Naren
     Posted on 03/10/2010 at 8:53 am
    வன்னி மக்களாகிய நாம் பிரபாரகரன் எனும் மிகக் கொடிய கொலைகாரக்
    கும்பலிடமிருந்து விடுதலை பெற்றுள்ளோம். எனினும் இதுவரையிர் மனோரீதியான
    தாக்கத்திலிருந்து விடுதலைபெறமுடியவில்லை விரைவில் இவற்றிலிருந்தும் விடுதலை
    பெற்று சுத்தமான சுதந்திரக்காற்றை சுவாசிப்போம்?.. ஆமா!!!! அது
    இன்னாசாரர்ர்ர்…. தமிமீழம் என்றால்?
    Reply
      Sivakumaran
       Posted on 03/10/2010 at 10:22 am
      இந்த பதிலைத்தான் எதிர்பார்த்தேன்.
      Reply Naren
       Posted on 03/10/2010 at 11:38 am
      2009 மே 18 இல் நாம்’ சுதந்திரம் பெற்றுவிட்டோம். எங்களுக்கு இதுவே போதும்.
      நான் கேள்விப்பட்டவரையில் “யாழ்” மேலாதிக்க மேதாவிகளுக்குத்தான் சுதந்திரம்
      இல்லையென்று கேள்விப்பட்டேன் வேண்டுமானால் அவர்களே தங்கள் பிள்ளைகளை பறி
      கொடுத்து தங்கள் சுதந்திரத்தை பெற்றுக்கொள்ளட்டும். வன்னி மக்களையோ அல்லது
      அவர்களது பிள்ளைகளையோ பயன்படுத்தி தாங்கள் சுதந்திரம் பெற்றுக் கொள்ள
      நினைக்கும் மூதேவித்தனங்களுக்கு நாங்கள் உயிரைவிடத்தயாரில்லை. ஹி!..ஹி!…ஹி!..
      இதிலே பகிடி என்னெவென்றால் வன்னிமுழுக்க இழவுவீடு நடக்க தாங்கள் “கிறிக்கெட்
      மச்” நடாத்துறானுகளாம். கிறிக்கெற்மச். எனவே இது போன்ற ஈனத்தனமான செயல்களை
      செய்து நீங்கள்தான் சுதந்திரத்தை பறிகொடுத்து விட்டீர்கள் எனவே அதனை நீங்களே
      கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள் எங்களை விட்டு விடுங்கள்.
      Reply
        சருகு
         Posted on 03/10/2010 at 4:46 pm
        இனி புல்லைத்தின்றோ புண்ணாக்கைத் தின்றோ… புழுக்கை போட..சுதந்திரம்
        Reply அசல்
         Posted on 03/10/2010 at 5:24 pm
        நரேன்
        இங்கு பிரதேசவாதத்தை கிண்ட நீர் நிறையவே முக்கிக்கொண்டிருக்கிறீர்.  அதை
        கொஞ்சம்நுணுக்கமாய் செய்யோணும். பாரும் அதிகமாய் முக்கி உம் மூலந்தான்
        அசிங்கமாய் தெரியுது.
        Reply
          Naren
           Posted on 03/10/2010 at 6:16 pm
          உங்களைப் போன்ற மேதாவிகளிடமிருந்து நாங்கள் தப்ப வேண்டுமென்றால் நாம்
          பிரதேச வாதத்தை முன்வைப்போம்.. ஆமாண்டா பிரதேசவாதம்தான்.. அதுக்கென்ன
          இப்போ?….Sivakumaran
         Posted on 03/10/2010 at 8:56 pm
        உங்களை யார் உயிரை விட சொன்னது. உங்களுக்கு யாரும் சொல்லவில்லையா வன்னியில்
        இருப்போரில் பெரும்பாலோனோர் பூர்வீகம் யாழ்ப்பாணம் என்பதை. அது சரி,
        இவையெல்லாவற்றையும் கேள்விப்பட்டு அறியும் நிலையில் தானே இருக்கிறீர்கள்.
        நீங்கள் மே 18 இல் சுதந்திரம் அடைந்ததாக தெரிவிக்கிறீர்கள். மகிழ்ச்சி
        தான். ஒரு கேள்வி, வன்னியில் வதை முகாமில் இருக்கும் மக்களின் சுதந்திரத்தை
        எப்பொழுது கொடுக்கப்போகிறீர்கள். எங்கே கிறிக்கெட் மட்ச் நடந்ததென்பதை
        சொல்வீர்களா? நல்ல தமிழ் எழுதுகிறீர்கள். நல்ல பயிற்சி. தொடர்ந்து பயிற்சி
        செய்யுங்கள். அன்னை தமிழ் மகிழ்வுறுவாள். சிறிது பொறுங்கள், தமிழ் மீதும்
        பாய்ந்து விடாதீர்கள். நீங்கள் ஏன் தமிழீழ விடுதலையை இப்படி
        வெறுக்கிறீர்கள். அஹிம்சை வழியில் போராடி விடுதலை பெற்றால் கூட உங்களுக்கு
        பிடிக்காது போல் இருக்கிறது. நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ தமிழீழம்
        விடுதலை அடையும். புலியென்று பாயாதீர்கள். நான் புலியுமல்ல கழுகுமல்ல.
        தமிழனையும் தமிழீழத்தையும் நேசிக்கிற தமிழன். நீங்கள் உண்மையான தமிழனானால்
        உங்களையும் நேசிப்பேன்.
        Reply
          aruna
           Posted on 03/11/2010 at 5:34 am
          உங்களது பதிலில் இருந்து தெரிகின்றது நீங்கள் யதார்தத்துக்கு எதிரானவர்
          என்பது. செல்வா எனத் தொடங்கி பலரும் இந்த அகிம்சை வாதிகள் தான். இவர்கள்
          விட்ட வழிதான் இன்று இப்படி……..
          காகிதப் புலியாக இருப்பதை விட்டு மக்களின் இன்றைய தேவைகளுக்கு குரல்
          கொடுங்கள். ஒரு பயங்கரததில் இருந்து மீண்டுள்ளார்கள். புலம் பெயர்வில்
          இருந்து கொண்டு தமழீழம்….thurai
           Posted on 03/11/2010 at 12:41 pm
          தமிழனையும், தமிழீழத்தையும் நேசிப்பதாகத்தான்
          புலத்தில் வாழும் தமிழர் அனைவரும் கூறுகின்றார்கள். கடல் கடந்த த்மிழீழ
          அரசிற்கு
          அனுமதியும் கொடுத்து விட்டார்கள்.
          ஆனால் பக்கத்து வீட்டிலை ஒரு தமிழனின்
          இன்ப துன்பங்களிலை கல்ந்து கொள்ழுவதை விட நாட்டுக்கு நாடே தமிழனைத் தேடி
          ஒடுகின்றார்கள். எல்லோரும் தமிழரென்ற எண்ணம் எப்போ வரும்?.அதன் பின்னர்
          தமிழீழம்
          விடுதலை பற்ரிப் பேசலாம்.
          துரைmamani
         Posted on 03/11/2010 at 12:02 am
        நரேன் வன்னிமகன் என்பதை நம்ப முடியவில்லை .நான் 70-82 வரை வன்னியில்
        வசித்தவன் அப்போ யாழ் அகற்று சங்கம் ஒன்று வன்னி பகுதியில் செயற்பட்டது
        அதில் வன்னியை பூர்வீகமாக கொண்டவர்கள் யாரும் உறுப்பினர்களாக இருக்கவில்லை
        ஒரு தலைமுறை முன் யாழிலிருந்து குடியேறியவர்களே. ஜெர்மன் ஜெர்மானியருக்கே
        என்று கொக்கரித்த Hகிட்லர் ஒரு ஒஸ்ரியன். விசைப்பலகையில் கெட்ட வார்த்தை
        அடிப்பதற்கு யாருக்கும் அதிகநேரம் எடுக்காது. இனியொரு வர்த்தக அல்லது
        பொழுது போக்கு தளமல்ல.
        Reply
          Naren
           Posted on 03/11/2010 at 3:17 pm
          மாமணியண்ணை!… எங்களுக்குள் எதுவும் வேண்டாம் என்று நினைக்கின்றேன்.
          இருந்தாலும் ஒரு சின்ன விளக்கம். பாக்கிஸ்தான் இந்திய விலிருந்துதான்
          சென்றது. பாக்கிஸ்தானில் இருப்பவர்கள் இந்தியர்களா?. பாக்கிஸ்தானியரா?..
          நீங்கள் சொல்லுறது எப்படியிருக்குதென்றால் மன்மோகன்சிங் பாக்கிஸ்தானில்
          பிறந்தார்
          அதனால் அவர் ஒரு பாக்கிஸ்தானியர் என்று ஒரு பாக்கிஸ்தான்கரான்
          குழந்தைத்தனமாய்
          பேசுறமாதிரியில்லே?….ஏதாவது புரிஞ்சுதா சார்ர்ர்?… கொஞ்சம் பொறுங்கோ
          சார்ர்!..உங்களுக்கு விளக்கம் சொல்ல வந்து எனக்கே எல்லாம்
          குளம்பிட்டுது. இப்போ!….. ஐரோப்பிய நாடுகளிலிருந்துபோனவன்தான்
          அமெரிக்க நாட்டில் குடியேறிய வெள்ளைக்காரன். அதற்காக அமெரிக்கன் எல்லாம்
          ஐரோப்பியனா?…
          இவ்வளவும் ஏன் சார்?…. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின்
          நிலப்பரப்போடு சேர்ந்திருந்தாக
          கூறப்படுவதே இலங்கை என்ற தீவு. பின்னர் கடல்கோள்களாலும். சுனாமிகளாலும்
          நிலம் பிளவுபட்டு உருவானதே இலங்கை அவ்வாறு பிளவுபட்டபோது அந்த
          நிலப்பரப்புகளோடு சேர்ந்து வந்த தமிழர்களே இலங்கையின் பூர்வீக
          குடிமக்களான இலங்கைத்தமிழர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். நீங்கள்
          சொல்லுவது
          எப்படியிருக்கின்றதென்றால் மொத்தத்தில் நீங்கள் ஒரு தமிழ்நாட்டுக்காரன்
          என்று சொல்லுறமாதிரி இருக்கு. இல்லையா?உண்மை
   Posted on 03/10/2010 at 7:50 am
  கடவுள் அண்னா,
  ரெலோ இயக்கம் அழிக்கப்பட்டபோது விமர்சித்து வெளியெறிய்வர் நீங்கள் அன்று கருனா
  உங்கள் ரொ உளவாளி என்று தலைவ்ருக்கு சொன்னான் அதை அவர்நம்பினார்
  இன்று கருனா யார் ?
  Reply JAMES FREDRIC
   Posted on 03/11/2010 at 5:57 am
  ஒட்டுமொத்த தமிழினமும் நெருக்கப்படுகிறது என்று நான் குற்றம்
  ச்ச்ட்டுகிறேன்!ஐயருக்கு ஒரு தகவல்,நீங்கள் அரசியல் பேசுகிறிர்கள்!,அரசியல் பேசிய
  வே.பிரபாகரனும்,கா.வே.பலகுமாரனும், அழிக்கப்பட்டார்கள்,உங்கள் ஆதரவாளரான ராகவனும்
  மகிந்தாவுடன் அரசியல்? பேசுகிறார் என்கிறீர்கள்,அனால் மேலே உள்ளவர்களிடம்
  எடுபிடிகளாக இருந்த,கனடிய தமிழ் பேரவை தலைவர்? நேரு குணரத்தினம்
  போன்றவர்களும்,புலிகளுக்கு பைனான்ஸ் செய்கின்ற? அண்ணியின்(மதிவதனி) வானரப்படை
  என்று காக்காய் பிடித்து திரிந்த,கொழும்பில் “சோத்துக்கடை புகழ்” பு(ளி)லி
  களுக்கும் இந்தியாவில்,”தமிழ்நாட்டில்” எப்படி இவ்வளவு சொத்து குவிந்தது?.இந்த
  சொத்துக்களுக்கு,விடுதலை சிறுத்தைகள் தலைவர்? தொல்.திருமாவளவன் புதையலை
  காக்கும் “பூதமாக” ஏன் காவல் இருக்கிறார்?.தமிழ்நாட்டின் பொருக்கிதின்னும்
  கூட்டம் இதை சுற்றி ஏன் வளர்த்து விடப்படுகிறது?.இதை கண்டும் காணாமல் கலைஞர் மு
  கருணாநிதியின் குடும்பமும்,”இந்திய உளவுத் துறையும்” “எந்த திட்டத்துடன்”
  உள்ளனர்?இந்தக் கும்பல்,இலங்கை என்னும் அழகிய தீவை செழிப்பாக வைத்துவிட்டு,தமிழ்
  நாட்டுக்குள் புகுந்திருந்தால் சந்தேகம் படவேண்டாம்!.ஆனால் இலங்கையை குட்டிச்
  சுவராக்கியதே இந்த பு(ளி)லி வியாபாரிகள்தான்.அபிவிருத்தி பணிகளுக்கான சாமாஙளை
  தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யும் டக்ளஸ் தேவாநந்தாவின் ஆட்களும்,பிள்ளையான்
  கருணா ஆட்களையும் கூட இந்திய உளவுத் துறை அனுமதித்துள்ளது அது
  பரவாயில்லை,ஏனென்றால்,அதில் “லோக்கல் அரசியல்” சம்பந்தப்படவில்லை.மகிந்த
  ராஜபக்ஷே கூட வட இந்திய பெரும் முதலாளிகளுடன் நேரடியக அபிவிருத்தி பணிகளுக்காக
  தொடர்பு வைத்துள்ளார்.ஆனால் கே.பி.மூலம் விளைவை சிந்திக்காமல்(உளவு
  நிறுவனங்களின் திட்டத்திற்காக) அணைந்து வரும் (தமிநாட்டில்) முன்னாள் புலிஆதரவு
  வியாபாரிகளின் பேரசை தமிழர்களின் குரவளையைப் பிடிப்பது.இவர்களுக்கு ஒட்டு
  மொத்தமாக தமிழ்நாட்டில் என்ன வேலை??.ஆமை புகுந்த வீடும்,அமீனா புகுந்த வீடும்
  உருப்படாது.அப்படிதான் இவர்கள் புகுந்த தமிழ்நாடும்,தமிழர் வாழ்விடங்களும்!.
  Reply selva
   Posted on 03/11/2010 at 1:02 pm
  தம்பி தோட்டா, தமிழர்களை ஒரு 5 வருடமாவது நின்மதியாக வாழவிடு. பின்பு தமிழனை
  தேடவேண்டிவரும். அதர்க்கும் தந்தையும், உன் அண்ணனும்(தலைவனும்) தான் காரணம்.
  ஓரளவு அறிவு………. அப்படி என்றால் என்ன? இதை வாசிக்கவும்.
  http://www.tamilwin.com/view.php?2aSIPJe0dHjoC0ecGG1B4b4Z98Mcd2g2F3dc2Dpi3b426QV2e22ZLu30
  Reply pirann
   Posted on 03/11/2010 at 4:21 pm
  நல்லா தான் எழுதுரியல், நல்ல பொழுது போக்கு, எழுதுங்கோ
  Reply Soorya
   Posted on 03/12/2010 at 10:00 pm
  நன்றாக கதைக்கவும் எழுதவும் தெரிந்தா இவர்கள் சொல்வதெல்லாம் உண்மையாகாது.
  தமிழ்வின் ஊடக தர்மம் நடுநிலைமை மறந்து பலகாலம் போய்ச்சு.
  Reply who
   Posted on 03/13/2010 at 8:18 pm
  Whoever wrote here on behalf of Tamils, make sure that your both parents are
  Tamils and all of you grandparents are Tamils and no mix of any other races.
  Reply yaaro
   Posted on 03/14/2010 at 3:15 am
  தமிழரை கழித்துப்பிரிக்காதீர் கூட்டிப்பெருக்குவீர். தமிழில் உயிர் எழுத்துக்கள்
  பன்னிரண்டு. இந்த பன்னிரண்டு எழுத்துக்கழையும் மெய்யெழுத்துகள் பதினெட்டுகளால்
  பெருக்கியதால் உயிர்மெய் எழுத்துக்கள் இருநூற்றிபதினாறு கிடைத்தன. இத்தோடு
  உயிரெழுத்துக்களையும் மெய்யெழுத்துகளையும் கூட்டியதால் இருநூற்றிநாப்பத்தியாறு
  எழுத்துக்கள் கிடைத்தன. இவற்றோடு ஆய்த எழுத்தையும் கூட்டியதால் தமிழில்
  இருநூற்றிநாப்பத்தியேழு எழுத்துக்கள். இவைதான் எமது மக்கள். இவற்றினுள் சில
  எழுத்துக்கள்தான் சொற்களின் முன்னால் வரமுடியும். மற்றவையெல்லாம் சொற்களின்
  நடுவில் அல்லது கடைசியில்தான் வரமுடியும். இதுபோல்தான் நம்மில் சிலர்
  மட்டும்தான் தேசியதலைவராக முடியும்.
  Reply ரூபன்
   Posted on 03/14/2010 at 8:41 am
  தமிழுக்கு ‘அமு’தென்று பேர், அதற்கு சிலபேர் ‘சைனைடு’ தான் தமிழ் என்று
  நாண்டுகொண்டு நிக்கிறார்கள்.
  இவர்களுக்கு ‘உயிரும் மெய்யும்’ எப்படி இணையும் என்ற ‘சூத்திரம்’ தெரியாத
  ”தேசியத் தமிழர்கள்!!???”
  Reply pandithar
   Posted on 03/14/2010 at 7:24 pm
  அன்புடன் ஐயருக்கு….
  நான் அறிந்த தகவல் ஒன்றை வைத்து அதன் சந்தேகத்தை உங்களிடம் கேட்டு தெரிய
  ஆசைப்படுகின்றேன். புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் துவிச்சக்கர வண்டி
  ஓட்டுவாரா?…. கூட இருந்தவர் நீங்கள் உண்மையை சொல்’லுங்கள்!………..
  Reply
    நெருஞ்சி
     Posted on 03/14/2010 at 7:54 pm
    துவிச்சக்கர வண்டி ஓடத் தெரியாத தமிழர்கள் இருந்தது குறைவு.அதிலும் போராளிகள்
    துவிச்சக்கர வண்டி ஓடக் கூடவா தெரியாமல் இருந்திருப்பார்கள்?
    உங்கள் பண்டிதத்தனமான கேள்வியில் ஏதோ தொக்கி நிற்கிறதே!
    மதகடியில்,மந்தார நிலையில் ஞானப் பிழப்புகள்
    ஞானும் அறிதல் நலமாமோ.
    Reply மணியம்
   Posted on 03/15/2010 at 1:33 pm
  என்ன ஐயரே, பாகம் பத்தை காணோம். யாராவது அச்சுறுத்தலா? இல்லாட்டி எழுதும்
  பாதையும் திசையும் மாறுதோ? என்னத்திற்கும் தாங்கள் சென்னையில் அஞ்சாதவாசம்
  கொண்டபோது அறிந்த புலியிலை இருந்து பிரிந்த புலோடிண்டை வணடவாலங்களையும்
  எழுதிறதுதானே.
  Reply Thamilmaran
   Posted on 03/15/2010 at 5:22 pm
  அய்யர் தொடர் கதையே எழுதுரேர் உடன எழுத வரலாறூ அய்யா வரலாறூ.நீங்கள் சொல்லுறதை
  எல்லாம் எழுத இது ஒன்றூம் உங்கள் சொந்தக்கதையும் அல்ல தமிழ் இனத்தின் கதை.
  Reply
    xxx
     Posted on 05/08/2010 at 5:05 am
    எல்லா வரலாறும் யாரோ சொன்ன கதை தான்.
    தவறுகளும் பொய்களும் காலப் போக்கில் வடிகட்டப் படலாம்; சேர்க்கவும் படலாம்.
    நாமறிந்த தமிழர் வரலாற்றில் எத்தனை புனைவுகள்!
    ஐயர் சொல்லட்டும். பிழைகழையும் தவறுகளையும் சுட்டிகாட்டுவது தான் சரியான
    அணுகுமுறை.
    ஐயர் யாரையும் தனிப்பட்ட முறையில் பழி தீர்க்கவோ காட்டிக் கொடுக்கிற விதமாக
    முன்யோசனை இன்றி எழுதவோ முற்பட்டால் அது தவறு.
    அவர் கூறும் உண்மைகளை அஞ்சுவோர் தங்கள் நிழல்கட்கும் அஞ்சுவர்.
    Reply
      yaaro oruvan
       Posted on 05/08/2010 at 8:03 am
      XXX புனைவுகள் இல்லாமல் தமிழர் வரலாரு இதுவரை எழுதப்படவில்லை.புஸ்பராஜாவின்
      ஈழப்போராட்ட வரலாருடன் ஒப்பிடுகையில் ஐயரின் வரலாற்றுக்கதை சிறிதளவாதல்
      உண்மயை தாங்கிவருகிறது என்பதே “உண்மை” நீங்கள் கூறியதுபோல் பொய்களும்
      தவறுகளும் காலப்போக்கில் வடிகட்டப்படலாம்.
      Reply ruby
   Posted on 05/07/2010 at 8:51 pm
  இறுதி காலத்தில் சுந்தரம், கே. எ. சுப்ரமணீயம் உடன் தான் நெருங்கிய தொடர்பு
  வைத்தி ருந்தார்.
  Reply Leave a Reply
Click here to cancel reply
 Your name (Required)
 Your e-mail (Your email won't be published) (Required)
 Your website
உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..

 English  Bamini Tamil-English
 Add Webcam Comment Add Audio-only Comment
 Notify me of followup comments via e-mail
   The AuthorThis post was written by இனியொரு.. on Friday, March 5, 2010, 1:30.
This author has written 1624 posts on this blog.
InformationPosted in அரசியல், பிரதான பதிவுகள், வரலாற்றுப் பதிவுகள்
  This post has 125 Comments. Write your own comment.
  User Ratings
   (No Ratings Yet)
   Loading ...
  வகைகள்அரசியல் ஆக்கங்கள் இன்றைய செய்திகள் இலக்கியம்/சினிமா கவிதைகள் காட்சி
    சிறுகதைகள் துடைப்பானின் குறிப்புகள்.. நூல் விமர்சனம் பிரதான பதிவுகள்
    பெண்கள்தினம் போராளிகள் டயரி வரலாற்றுப் பதிவுகள் பின்னூட்டங்கள் மலையாள
    அதிகாரிகளின் துரோகங்கள் : சாம்ராஜ் (40)
      pradeepan: உங்கள் கருத்துக்கள் அத்தனையும் அணைவரும் அறிவர். வீரு கொன்டு
      எழ...புத்தகத்தைப் பறித்தெறியும் பிரபாகரன் – ஈழப் போராட்டத்தில் எனது
   

No comments:

Post a Comment